News March 21, 2025
நாளை கருப்புக் கொடி போராட்டம்: பாஜக அறிவிப்பு

மாநில CMகளை ஒருங்கிணைத்து தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து திமுக சார்பில் சென்னையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இந்நிலையில், திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் நாளை வீடுகளுக்கு முன் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடக்கும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். அரசு மீது மக்களுக்கு எழுந்துள்ள கோபத்தை திசை திருப்பவே மறுசீரமைப்பு நாடகத்தை திமுக அரங்கேற்றி வருவதாகவும் அண்ணாமலை சாடியுள்ளார்.
Similar News
News March 28, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது ▶எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள் ▶ஒன்றே குலம், ஒருவனே தேவன் ▶ விதியை நம்பி, மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிக கேடு ▶உலகின் பிளவு குடும்பத்தில் ஆரம்பிக்கிறது.
News March 28, 2025
காம சிந்தனைகளால் ஏற்படும் வஞ்சித தோஷம் நீங்க…

ஜாதகத்தில் சந்திரன் நிலை கெட்டிருந்தாலும், காம சிந்தனைகளால் மதி திசைமாறி நடப்பதாலும் வஞ்சித தோஷம் ஏற்படுகிறது. அதை போக்க வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று விரதம் இருந்து மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலின் தீர்த்தத்தில் நீராடி, சிவப்பு நிற வஸ்திரம் அனைத்து 48 தீபங்களை ஏற்றி அம்மனை வழிபட்டு 11 ஏழைப் பெண்களுக்கு உணவிட்டு, சேலை தானம் அளித்தால் வஞ்சித தோஷம் விலகும் என ஐதீகம்.
News March 28, 2025
மியாமி ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் டிமித்ரோவ்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ் அரையிறுதிக்கு போட்டிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில், அவர் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ உடன் மோதினார். இதில், டிமித்ரோவ் 6-7 (6-8), 6-4, 7-6 (7-3) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.