News March 15, 2025

ஹரியானாவில் பாஜக மண்டல தலைவர் சுட்டுக்கொலை

image

ஹரியானாவின் சோனிபட் நகரில் முன்ட்லானா மண்டல பாஜக தலைவர் சுரேந்திர ஜவஹர் சுட்டுக்கொல்லப்பட்டார். நிலத் தகராறு காரணமாக, அவரின் வீட்டின் அருகே இருக்கும் நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். தனது நிலத்தில் கால் வைக்கக்கூடாது என கொடுத்த எச்சரிக்கையை மீறி ஜவஹர் அங்கு சென்றதால், இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. கொலை செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Similar News

News March 15, 2025

கொரோனாவால் ஆண்களுக்கு நேர்ந்த கொடுமை

image

கொரோனா பெருந்தொற்றுக்கு பின் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக 20121-ல் கொரோனா பாதித்த ஆண்களில் 5-ல் ஒருவருக்கு விறைப்புத்தன்மை பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு பாதிப்பு தொடர்கிறதாம். ஆணுறுப்பு ரத்தநாளங்களை வைரஸ்கள் பாதித்ததால், விறைப்பு நிலையை எட்டுவது இவர்களுக்கு கடினமாக உள்ளதாம். ஆண்களுக்கு வந்த சோதனை!

News March 15, 2025

நாய் கீறி விட்டதா? இதை செய்ய மறக்காதீங்க

image

வேலூரில் ரமேஷ் (49) என்பவரை, நாய் கீறிவிட்டுள்ளது. அவரும் அதை பொருட்படுத்தாமல், தடுப்பூசி போடாமல் இருந்துள்ளார். ஆனால், 40 நாட்களுக்கு பிறகு காய்ச்சல் வரவே, ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை சுட்டிக்காட்டும் டாக்டர்கள், நாய் போன்ற விலங்குகள் கடித்தால் மட்டுமல்ல, கீறினாலும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே, தடுப்பூசி போட மறக்க வேண்டாமென அறிவுறுத்தியுள்ளனர்.

News March 15, 2025

இருமொழிக் கொள்கையால் இக்கட்டான நிலை இல்லை: CM

image

சென்னை பார் அசோசியேஷனின் 160வது ஆண்டு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் கூறினார். மேலும், இருமொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில் இக்கட்டான நிலை இல்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

error: Content is protected !!