News April 19, 2025
பாஜக குலத்தொழிலை ஊக்குவிக்கிறது: CM விமர்சனம்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கைவினைத் திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய அவர், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிக்கிறது என விமர்சித்தார். எனவே தான், சாதி பாகுபாடு இல்லாத வகையில் கைவினைக் கலைஞர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்ற கலைஞர் கைவினைத் திட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறினார்.
Similar News
News November 25, 2025
நடிகை பாலியல் வன்கொடுமை.. 8-ம் தேதி தீர்ப்பு

மலையாள நடிகர் திலீப்பிற்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் 8-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. திலீப் உள்ளிட்ட 9 பேருக்கு எதிரான இந்த வன்கொடுமை வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்டன. இந்நிலையில் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கவுள்ளது.
News November 25, 2025
அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. முடிவை தெரிவித்தார்

2026-ல் தேமுதிகவுக்கு<<18372669>> ராஜ்யசபா சீட்<<>> வழங்கப்படுவதாக அதிமுக அறிவித்திருந்தது. ஆனாலும், அதிமுகவிற்கு தேமுதிக பிடிகொடுக்காமலேயே இருந்தது. இந்நிலையில், ராஜ்ய சபா சீட்டுக்காகவெல்லாம் கூட்டணி அமைக்க மாட்டோம் என பிரேமலதா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுகவை மனதில் வைத்தே அவர் இவ்வாறு பேசியதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது?
News November 25, 2025
தமிழ்த்தாய் பாடல் இல்லாமல் அரசு நிகழ்ச்சி: அண்ணாமலை

CM தலைமையில் நடைபெற்ற செம்மொழி பூங்கா திறப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமலேயே நிகழ்ச்சி தொடங்கியது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், செம்மொழிப் பூங்காக்கள், தமிழ் மொழியைப் போற்றுவதற்காக அமைக்கப்படுவதாக திமுக கூறுவதுதான் இதில் நகைமுரண் என அண்ணாமலை சாடியுள்ளார். உயிரோடும், உணர்வோடும் இருக்க வேண்டிய தமிழ்ப் பற்றை, பிரிவினைவாத அரசியலுக்காக திமுக பயன்படுத்தி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.


