News September 4, 2025
இந்தியாவின் கௌரவத்தை பாஜக விற்றுவிட்டது: மம்தா

இந்தியாவின் கௌரவத்தை மத்திய பாஜக அரசு வெளிநாட்டு சக்திகளுக்கு விற்றுவிட்டதாக மம்தா பானர்ஜி சாடியுள்ளார். சில நேரங்களில் அமெரிக்காவிடமும், சில நேரங்களில் சீனாவிடமும் பாஜக அரசு கெஞ்சுவதாகவும், அவர்களால் நாட்டை நடத்தவோ, நாட்டின் நலன்களை பாதுகாக்கவோ முடியாது என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இப்படிப்பட்டவர்கள் தான் ஆள்வது, எப்படி என தங்களுக்கு போதிப்பதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News September 7, 2025
இந்திய கிரிக்கெட் அணியின் ஒரே கேம் சேஞ்சர் இவர்தான்

இந்திய அணியில் விராட், ரோஹித் இல்லாதது மிகப்பெரிய இழப்புதான் என்று இங்கி., முன்னாள் வீரர் ரோலண்ட் புட்சர் கூறியுள்ளார். இவர்கள் இருவர் இல்லாதபோது, கில் தலைமையிலான இளம்படை இங்கி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரை சமனில் முடித்ததையும் அவர் பாராட்டினார். அதேநேரம், தற்போதைய இந்திய அணியில் ஆட்டத்தை மாற்றக்கூடிய ஒரே வீரர் ரிஷப் பண்ட் மட்டுமே என்றும் அவர் புகழாராம் சூட்டியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News September 7, 2025
எனக்கு என்னமோ திருப்திப்படல: அண்ணாமலை

கடந்த சில நாள்களாக கூட்டணியில் (NDA) நடக்கும் நிகழ்வுகள் திருப்தியாக இல்லை என அண்ணாமலை கூறியுள்ளார். TTV தினகரன் விலகல், செங்கோட்டையனின் பொறுப்பு பறிப்பால் அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் ஆகியவை NDA கூட்டணிக்கு புதிய நெருக்கடியாக அமைந்துள்ளது. எனவே, புதிதாக ஒரு கட்சியை அழைப்பதை விட, இருப்பதை வைத்து கூட்டணியை வலுப்படுத்துவது எப்படி என்பதையே பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
News September 7, 2025
BCCI பேங்க் பேலன்ஸ் இவ்வளவா?

BCCI வங்கிக் கணக்கில் ₹20,686 கோடி உள்ளதாக தகவல் வெளியாகி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2019-ல் ₹6,059 கோடியாக இருந்த பேங்க் பேலன்ஸ், கிட்டத்தட்ட ₹14,000 கோடி உயர்ந்துள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் அணியினரின் பங்கு அளப்பரியது என்று கூறப்படுகிறது. சர்வதேச தொடர்களை விட IPL சீசன்களில் BCCI அதிக கல்லா கட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணக்கார கிரிக்கெட் வாரியமாகவும் BCCI உள்ளது.