News June 16, 2024

தேர்தல் முடிவில் இருந்து பாஜக பாடம் கற்கவில்லை

image

சமூக செயற்பாட்டாளர் அருந்ததி ராய் மீது உபா சட்டத்தில் வழக்குப் பதிந்ததை மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கண்டித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “தேர்தலில் பாஜக பாடம் கற்றுக் கொள்ளவில்லை. கருத்தைக் கண்டு அஞ்சும் கோழைகளுக்கு அடக்குமுறையே ஆயுதம். அடக்குமுறையை எதிர்கொள்ளும் கூர்மையான ஆயுதமே கருத்துரிமை. தேசம் அருந்ததி ராயின் பக்கம் நின்று ஜனநாயக விரோதிகளை எதிர்கொள்ளும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 2, 2026

பள்ளிகள் நாளை விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

சந்திர சூடேஸ்வரர் கோயில் விழாவையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, தேன்கனிகோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களில் நாளை (மார்ச் 3) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, நாளை மறுநாள் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. SHARE IT.

News March 2, 2026

BREAKING: பொதுத்தேர்வில் 10,000 மாணவர்கள் ஆப்சென்ட்

image

+12 மாணவர்களுக்கு இன்றுமுதல் பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், முதல் நாளில் சுமார் 10,000 பேர் மொழித்தேர்வை எழுதவில்லை. பள்ளி மாணவர்கள் 8,319 பேர் மற்றும் தனித் தேர்வர்கள் 1,600 பேர் இன்றைய தேர்வை தவறவிட்டதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்வில் எந்த மாணவர்களும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களே தேர்வு எப்படி எழுதியிருக்கீங்க?

News March 2, 2026

நாளை சந்திர கிரகணம்.. இதெல்லாம் செய்யக் கூடாது!

image

ஜோதிட சாஸ்திரத்தின்படி, <<19280134>>சந்திர கிரகணத்தின்போது<<>> வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைக்கக் கூடாது. கோவிலுக்கு செல்லக் கூடாது. கிரகண நேரத்தில் சாப்பிடக் கூடாது. மேலும், கிரகணம் முடிந்த பிறகு சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டுமாம். அதன்படி, வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். மேலும், கோயிலுக்குச் சென்று தீர்த்தம் வாங்கி வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். SHARE IT.

error: Content is protected !!