News February 25, 2025
தமிழர்களை பாஜக எதிரியாக நினைக்கிறது: காங்கிரஸ்

வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதாவுக்கு TN CONG தலைவர் செல்வப்பெருந்தகை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சட்ட திருத்தம் மூலம் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலின் பெயரை, மெட்ராஸ் பார் கவுன்சில் என பெயர் மாற்ற மத்திய அரசு துடிப்பதாகவும் விமர்சித்துள்ளார். தமிழ், தமிழர்கள் என்றாலே பாஜக வெறுப்பை காட்டுவதாகவும், இதற்கெல்லாம் மத்திய அரசு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும் எனவும் சாடியுள்ளார்.
Similar News
News February 25, 2025
13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 13 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த பிருந்தா தமிழ்நாடு சிறப்புப்படை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ஆயுஷ் மணி திவாரி சென்னை குற்ற ஆவணக் காப்பகத்தின் ஏடிஜிபியாகவும், ஜெயராம் சென்னை ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளனர். சைபர் க்ரைம் எஸ்பியாக இருந்த அசோக்குமார் பட்டாலியன் எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
News February 25, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே. ▶ஓய்வு, சலிப்பு என்பவற்றை தற்கொலை என்றே கருதுகிறேன். ▶ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும். ▶ மதம் மனிதனை மிருகமாக்கும்; சாதி மனிதனை சாக்கடையாக்கும்.
News February 25, 2025
அதிமுகவை அழிக்க இபிஎஸ் மட்டுமே போதும்: புகழேந்தி

அதிமுகவை இபிஎஸ் விரைவில் அழித்து விடுவார் என அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி விமர்சித்துள்ளார். ஓநாயும், வெள்ளாடும் கூட சேர்ந்துவிடும், ஆனால் ஒருபோதும் இபிஎஸ் திருந்த மாட்டார் எனவும் விமர்சித்துள்ளார். கொடநாடு கொலை வழக்கில் இபிஎஸ்யை விசாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.