News December 6, 2024

‘பிட்காயின்’ மதிப்பு ₹84 லட்சமாக உயர்வு… காரணமென்ன?

image

கிரிப்டோகரன்சி மெய்நிகர் நாணயங்களில் ஒன்றான, ‘பிட்காயின்’ மதிப்பு, முதன் முறையாக ஒரு லட்சம் டாலரை (₹84 லட்சம்) கடந்துள்ளது. கிரிப்டோ ஆலோசனை கவுன்சில் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்திருப்பதே இந்த மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணமென சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதும், இந்த மின்னணு கரன்சிகளின் மதிப்பு மேலும் பல மடங்கு உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News April 30, 2025

2 அறை கொடுப்பேன்: VJD காட்டம்

image

டைம் மிஷின் கிடைத்தால் வரலாற்றில் யாரை சந்திப்பீர்கள் என விஜய் தேவரகொண்டாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்களுக்கு 2 அறை கொடுப்பேன் எனவும், ‘சவா’ படம் பார்த்த பிறகு அவுரங்கசீப்பிற்கு 2 அறை கொடுக்க வேண்டும் என தோன்றுவதாகவும் தெரிவித்தார். மேலும், தன்னிடம் இதுபோன்று அறை வாங்குவதற்கான ஆட்களின் பட்டியல் நிறைய இருப்பதாகவும் கூறினார்.

News April 30, 2025

ஏப்ரல் 30: வரலாற்றில் இன்று

image

*1945 – இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர், தனது மனைவி இவாவுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படைகள் ஜெர்மனி நாடாளுமன்றத்தில் செங்கொடியை ஏற்றினர். *1955 – இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றம் செய்யப்பட்டது. *1982 – திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. *2012 – இந்தியாவில் பிரம்மபுத்ரா ஆற்றில் பயணிகள் படகொன்று கவிழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர்.

News April 30, 2025

இவரால கூட இலவச கல்வி கொடுக்க முடியல!

image

மெட்டா CEO மார்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா ஆகியோரின் தொடக்கப்பள்ளி அடுத்த ஆண்டு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க, கலிஃபோர்னியாவில் கடந்த 2016-ல் இப்பள்ளி தொடங்கப்பட்டது. இது மிகவும் கடினமான முடிவு எனவும், குழந்தைகளை மற்ற பள்ளிக்கு மாற்ற உதவி செய்வோம் எனவும் தம்பதி தெரிவித்துள்ளனர். இருப்பினும் மூடப்படுவதற்கான காரணத்தை அவர்கள் அறிவிக்கவில்லை.

error: Content is protected !!