News December 6, 2024
‘பிட்காயின்’ மதிப்பு ₹84 லட்சமாக உயர்வு… காரணமென்ன?

கிரிப்டோகரன்சி மெய்நிகர் நாணயங்களில் ஒன்றான, ‘பிட்காயின்’ மதிப்பு, முதன் முறையாக ஒரு லட்சம் டாலரை (₹84 லட்சம்) கடந்துள்ளது. கிரிப்டோ ஆலோசனை கவுன்சில் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்திருப்பதே இந்த மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணமென சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதும், இந்த மின்னணு கரன்சிகளின் மதிப்பு மேலும் பல மடங்கு உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 19, 2025
BREAKING: செங்கோட்டையன் பாணியில் அடுத்த தலைவர்

பொதுவெளியில் கட்சித் தலைமைக்கு எதிராக பேசியதாகவும் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் GK மணிக்கு அன்புமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு அவர் விளக்கம் அளித்தால் அன்புமணியை தலைவராக ஏற்பதுபோல் அமையும். இல்லை எனில் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது போல, GK மணி பாமகவிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. பாமகவில் தந்தை-மகன் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 19, 2025
CINEMA 360°: 2025-ம் ஆண்டின் சிறந்த கலைஞராக துருவ் தேர்வு

*கிச்சா சுதீப்பின் ‘மார்க்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. *நடிகர் அர்ஜுன் தாஸ், இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். மலையாள நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்துக்கு நேற்று பூஜை நடைபெற்றது. *துருவ் விக்ரம், 2025-ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த கலைஞர்களில் ஒருவராக ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ இதழால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
News December 19, 2025
அனுமன் ஜெயந்தியில் சொல்ல வேண்டிய மந்திரம்!

‘அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்
கண்டுஅயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்’.
<<18609129>>இன்று <<>>இந்த மந்திரத்தை உச்சரியுங்கள். இதனால், மனதில் பயம் நீங்கி, வாழ்வில் வெற்றி கூடும் என நம்பப்படுகிறது. SHARE IT.


