News December 6, 2024

‘பிட்காயின்’ மதிப்பு ₹84 லட்சமாக உயர்வு… காரணமென்ன?

image

கிரிப்டோகரன்சி மெய்நிகர் நாணயங்களில் ஒன்றான, ‘பிட்காயின்’ மதிப்பு, முதன் முறையாக ஒரு லட்சம் டாலரை (₹84 லட்சம்) கடந்துள்ளது. கிரிப்டோ ஆலோசனை கவுன்சில் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்திருப்பதே இந்த மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணமென சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதும், இந்த மின்னணு கரன்சிகளின் மதிப்பு மேலும் பல மடங்கு உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News January 1, 2026

திமுகவுக்கு பெரும் நிம்மதி

image

பிரவீன் சக்ரவர்த்தி கிளப்பிய சர்ச்சையால் DMK-CONG கூட்டணியில் பிளவு ஏற்படலாம் என அரசியல் நோக்கர்கள் கருதினர். காங்., தவெக இடையே பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், செல்வப்பெருந்தகை கூட்டணி வலுவாக இருப்பதாக சொல்லிவிட்டார். <<18722641>>ப. சிதம்பரமும் <<>>திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், திமுக தலைமை நிம்மதியடைந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News January 1, 2026

பொங்கல் பரிசு… அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

image

பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க TN அரசு திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்காக ₹248 கோடி ஒதுக்கியுள்ள அரசு, 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, ஒரு கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதையடுத்து, ஒரு சில நாள்களில் ₹3,000 ரொக்கப் பணம் குறித்த அறிவிப்பையும் CM ஸ்டாலின் வெளியிடுவார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News January 1, 2026

ஆபரேஷன் சிந்தூர்.. இந்தியா பெருமிதம்

image

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த சான்று என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், இந்திய படைகள் திறம்பட செயல்பட்டு PAK-ன் தீவிரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்ற செய்தியை உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் சொல்லியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!