News December 6, 2024

‘பிட்காயின்’ மதிப்பு ₹84 லட்சமாக உயர்வு… காரணமென்ன?

image

கிரிப்டோகரன்சி மெய்நிகர் நாணயங்களில் ஒன்றான, ‘பிட்காயின்’ மதிப்பு, முதன் முறையாக ஒரு லட்சம் டாலரை (₹84 லட்சம்) கடந்துள்ளது. கிரிப்டோ ஆலோசனை கவுன்சில் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்திருப்பதே இந்த மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணமென சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதும், இந்த மின்னணு கரன்சிகளின் மதிப்பு மேலும் பல மடங்கு உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News December 14, 2025

நாளை அரையாண்டு தேர்வு.. மாணவர்களே ரெடியா இருங்க!

image

தமிழகத்தில் நாளை (டிச.15) 1 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தொடங்கவுள்ளன. டிச.23 வரை தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.10 முதல் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்களே, *படிப்பதற்கு தேவையான நேரம் ஒதுக்குங்கள். *இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதை தவிருங்கள். *பதற்றமின்றி தேர்வுகளை எழுதுங்கள். ALL THE BEST

News December 14, 2025

அழகுடன், ஆரோக்கியம் பேணும் பழங்கள்

image

குளிர்காலத்தில் ஏற்படும் உடல்நல பிரச்னைகளை தடுப்பதோடு, சரும பொலிவையும் காக்கும் தன்மை பழங்களுக்கு உண்டு. குளிர்காலத்தில் எந்தெந்த பழங்கள் என்னென்ன நன்மைகளை அளிக்கின்றன என்பதை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்..

News December 14, 2025

பெஸ்ட் ரிவஞ்ச்.. ஒரே குடும்பத்தில் 3 கவுன்சிலர்கள்

image

கேரளாவின் பாலா நகராட்சியில் ‘புளிக்காகண்டம்’ குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுயேட்சையாக போட்டியிட்டு கவுன்சிலராகி உள்ளனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், வெற்றி பெற்றவர்களில் ஒருவரான பினுவிற்கு கடந்த முறை கேரளா காங்கிரஸ் சீட் கொடுக்க மறுத்துள்ளது. இம்முறை இதே குடும்பத்தில் இருந்துதான் வெற்றி பெற்ற அவரது மகள் தியா, UDF ஆதரவுடன் நகராட்சி தலைவராகவுள்ளார்.

error: Content is protected !!