News December 6, 2024
‘பிட்காயின்’ மதிப்பு ₹84 லட்சமாக உயர்வு… காரணமென்ன?

கிரிப்டோகரன்சி மெய்நிகர் நாணயங்களில் ஒன்றான, ‘பிட்காயின்’ மதிப்பு, முதன் முறையாக ஒரு லட்சம் டாலரை (₹84 லட்சம்) கடந்துள்ளது. கிரிப்டோ ஆலோசனை கவுன்சில் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்திருப்பதே இந்த மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணமென சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதும், இந்த மின்னணு கரன்சிகளின் மதிப்பு மேலும் பல மடங்கு உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 23, 2025
விஜய்க்கு எதிராக களமிறங்கும் SK

GOAT படத்தில் விஜய்யிடம் இருந்து துப்பாக்கியை வாங்கிய சிவா தற்போது அவர் பக்கமே அதை திருப்பியிருக்கிறார். ஜன.10-ல் வெளியாகும் ’பராசக்தி’ படம், ஜன., 9-ல் விஜய்யின் ’ஜனநாயகன்’ படத்துடன் மோதவுள்ளது. இப்படத்தை உதயநிதியின் குடும்பத்தை சேர்ந்த ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். எனவே, ரசிகர்கள் இது வேண்டுமென்றே விஜய்க்கு எதிராக செய்யும் திட்டமிட்ட சதி என கருத்து தெரிவித்து வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News December 23, 2025
தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை: நயினார்

பியூஷ் கோயலுடன் EPS நடத்திய ஆலோசனையில் பாஜகவுக்கு <<18650954>>23 தொகுதிகள்<<>> ஒதுக்க அதிமுக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தொகுதி பங்கீடு குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இன்று நடைபெறவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலுக்கான ஏற்பாடு, களநிலவரம் உள்ளிட்டவை பற்றி மட்டுமே ஆலோசித்ததாகவும், தொகுதி பங்கீடு குறித்து பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
News December 23, 2025
நான் குற்றம் செய்யவில்லை: பி.ஆர்.பாண்டியன்

ஓஎன்ஜிசி வழக்கில் 13 ஆண்டு சிறையை <<18612508>>HC நிறுத்தி வைத்த<<>> நிலையில், விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து வெளியில் வந்த அவர் பேசுகையில், நான் எந்த குற்றமும் செய்யவில்லை. அந்த தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்ததற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பவம் நடந்த மறுநாள் தான் நான் அங்கு சென்றேன் என்றார்.


