News February 28, 2025
ஒரு மாதத்தில் ₹20 லட்சத்தை இழந்த பிட்காயின்

சர்வதேச சந்தையில் பிட்காயினின் மதிப்பு மளமளவென சரிந்து வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன் கிடுகிடுவென உயர்ந்த பிட்காயினின் மதிப்பு, ஜனவரி 30ஆம் தேதி ₹90 லட்சத்திற்கு மேல் இருந்தது. அது, கடந்த ஒரு வாரத்தில் கடுமையாக சரிந்து, தற்போது ₹69 லட்சத்திற்கு வர்த்தகம் ஆகிறது. இதனால், சமீபத்தில் அதில் முதலீடு செய்தவர்கள் பெரிய தொகையை இழந்து நஷ்டம் அடைந்துள்ளனர்.
Similar News
News February 28, 2025
தமிழக மக்கள் ஒருபோதும் இணங்க மாட்டார்கள்: திருமா

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்தியை கற்க வேண்டுமென ஆளுநர் கூறுவது RSS, BJPயின் ஆதிக்க மனப்பான்மையை உறுதிப்படுத்துவதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். ஒரே தேசம், ஒரே மொழியை செயல்படுத்துவதற்காக ஆளுநர் இப்படி பேசி வருவதாகவும், அவரின் பேச்சுக்கு தமிழக மக்கள் ஒருபோதும் இணங்க மாட்டார்கள் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்கக் கூடாது என்றார்.
News February 28, 2025
ரூ.1,000 உதவித் தொகைக்கான தேர்வு: புது அறிவிப்பு

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வாகும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் 9 – 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை செலுத்தப்படும். இந்தத் தேர்வு பிப்.9இல் நடத்தப்பட்டது. இதற்கான விடைக்குறிப்பு www.dge.tn.gov.inஇல் வெளியிடப்பட்ட நிலையில், ஆட்சேபனை இருந்தால், dgedsection@gmail.comஇல் மார்ச் 5க்குள் தெரிவிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.
News February 28, 2025
இட்லிக்குள் ஊடுருவும் நச்சு ரசாயனங்கள்

சாலையோர உணவகங்கள் மற்றும் சில கடைகளில் இட்லி வேகவைக்கும் தட்டில் துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள் பயன்படுத்தப்படுகிறது. நீராவியில் வேகும்போது, பிளாஸ்டிக்கில் உள்ள bisphenol A (BPA), phthalates, ஹார்மோனை சீர்குலைக்கும் ரசாயனங்கள், டயாக்சின், மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் போன்ற நச்சுப் பொருட்கள் இட்லியில் கலந்துவிடுகின்றன. இந்த இட்லிகளை சாப்பிடுவோருக்கு புற்றுநோய் அபாயம் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.