News May 7, 2024

KKR அணியின் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய பிஷப்

image

KKR அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆதரவாக WI முன்னாள் வீரர் இயன் பிஷப் கருத்து தெரிவித்துள்ளார். KKR அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததற்கு கம்பீரின் வழிகாட்டுதலே காரணம் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிஷப், “தோல்வி அடையும்போது அதற்கும் கம்பீர்தான் காரணம் என கூறுவீர்களா அல்லது ஸ்ரேயாஸை குறை சொல்வீர்களா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News August 21, 2025

தவெக மாநாட்டில் மோர் குடிப்பவர்களே அலர்ட்

image

மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டில், உணவு விற்பனை படு ஜோராக நடந்துவருகிறது. குறிப்பாக தயிர், தக்காளி சாதம் ₹70- ₹80, வெஜ் பிரியாணி ₹100, கூழ் ₹50, தண்ணீர் பாட்டில் ₹40, கரும்பு ஜூஸ் ₹30, சாத்துக்குடி ஜூஸ் ₹50, ஐஸ்கிரீம் ₹70 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் என்ன கொடுமை என்றால், இலவசமாக கொடுப்பது போல மோரை கொடுத்து, ஒரு டம்ளர் ₹50 என சிலர் அடாவடியாக பணம் வசூல் செய்கின்றனராம்.

News August 21, 2025

BIG BREAKING: இந்த பொருள்கள் விலை குறைகிறது

image

GST வரி விகிதங்களில் 12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்க FM நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. செல்போன், நெய், குடை, ஜாம், ஜூஸ் உள்ளிட்ட வகைகளுக்கு தற்போது 12% வரியும், பிரிட்ஜ், AC, சிறிய வகை கார்கள் உள்ளிட்ட பொருள்கள் 28% வரியிலும் இருந்த நிலையில் அவற்றில் மாற்றம் செய்யப்படவுள்ளன. இதனால், விரைவில் நாடு முழுவதும் பல பொருள்களின் விலை குறையவுள்ளது.

News August 21, 2025

அஜித் மரணத்தில் புதிய குற்றவாளி.. அதிர்ச்சி தகவல்

image

அஜித் குமார் மரண வழக்கில், CBI ஒரே மாதத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 5 காவலர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6-வது குற்றவாளியாக தனிப்படை வாகன டிரைவர் ராமச்சந்திரன் பெயரையும் சேர்த்திருப்பது குற்றப் பத்திரிகை மூலம் தெரியவந்துள்ளது. இதனிடையே, நிகிதாவின் நகைத் திருட்டு வழக்கு விசாரணையை CBI தொடங்க இருப்பதால், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!