News January 23, 2025

பெண்களுக்கு எதிரான வழக்குகளில் கடும் தண்டனை

image

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த 10ஆம் தேதி பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை, வன்கொடுமை செய்தால் ஆயுள் முழுவதும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

Similar News

News December 4, 2025

கலை ஆலமரத்தின் கிளை முறிந்தது: வைரமுத்து

image

AVM சரவணன் மறைந்ததற்கு கவிஞர் வைரமுத்து மனம் நொந்து இரங்கல் தெரிவித்துள்ளார். AVM-ல் அதிகமான பாடல்களை எழுத தனக்கு வாய்ப்பளித்தவர் சரவணன் என்றும், அவரை இழந்ததால் கலையுலகம் கையொடிந்து தவிக்கிறது எனவும் கூறியுள்ளார். இவரை தொடர்ந்து இரங்கல் தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு சரவணன் செய்த பணி நினைவில் நிற்கும் என புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

News December 4, 2025

விஜய்யை மறைமுகமாக கூட்டணிக்கு அழைத்த நயினார்

image

KAS தவெகவில் இணைந்ததே, அக்கட்சியை NDA கூட்டணியில் இணைப்பதற்குதான் என திமுக விமர்சிக்கிறது. இந்நிலையில், விஜய் உடன் கூட்டணி உண்டா என்ற கேள்விக்கு, TN-ல் திமுக ஆட்சி இருக்கக்கூடாது என நினைக்கும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என கூறியிருக்கிறார் நயினார் நாகேந்திரன். இவரது பதிலால், விஜய்யுடன் கூட்டணி என்ற ஆப்ஷனை பாஜக இன்னும் வைத்திருப்பது உறுதியாகியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News December 4, 2025

புயல் சின்னம்: மழை வெளுத்து வாங்கும்

image

வட தமிழ்நாட்டில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது முற்றிலும் வலுவிழந்ததாக IMD தெரிவித்துள்ளது. கடந்த 27-ம் தேதி டிட்வா புயல் உருவாகி, இலங்கை, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்த நிலையில் முற்றிலும் வலுவிழந்தது. இதனால், இனி மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

error: Content is protected !!