News August 27, 2025
போர்க்குரல் எழுப்பியுள்ளது பிஹார்: CM ஸ்டாலின்

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல் காந்தி பிஹாரில் நடத்திவரும் யாத்திரையில் CM ஸ்டாலின் கலந்துகொண்டார். தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சமூக நீதி, மதச்சார்பின்மைக்காக 2,000 கிமீ கடந்து வந்துள்ளதாக கூறினார். இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து வருகிறது என்பதால் பிஹார் போர்க்குரல் எழுப்பியுள்ளதாக தெரிவித்தார். BJP-க்கு பயப்படாமல் அரசியல் செய்தவர் லாலு பிரசாத் யாதவ் என்றார்.
Similar News
News August 27, 2025
பிரபல நடிகர் காலமானார்

பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான ஜாய் பானர்ஜி(62) காலமானார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், புகழ்பெற்ற மிலன் திதி, நாக்மதி, சாப்பார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பாஜகவில் இணைந்த இவர், 2014 லோக்சபா தேர்தலில் பிர்பும் தொகுதி, 2019 தேர்தலில் உலுபேரியா தொகுதியில் BJP சார்பில் போட்டியிட்டு TMC-யிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஜாய் பானர்ஜி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News August 27, 2025
₹500 கோடி இழப்பு.. தவிப்பில் திருப்பூர் நிறுவனங்கள்!

இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68% திருப்பூரில் இருந்தே நடக்கிறது. இந்நிலையில் டிரம்ப் விதித்த 50% வரியால் பின்னலாடை நிறுவனங்களுக்கு தினசரி ₹500-₹700 கோடி வரை உடனடி இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், ₹4,000 கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கி கிடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவுடன் இந்த வரியை நீக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென பின்னலாடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
News August 27, 2025
ஸ்டாலினுக்கு பிஹார் சமூகநீதி ஞானம் வழங்கும்: அன்புமணி

பிஹாரில் நடைபெற்ற பிரசார பயணத்தில் CM ஸ்டாலின் பங்கேற்றார். இதுகுறித்து அன்புமணி வெளியிட்ட X பதிவில், இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் விவரங்களை வெளியிட்ட மாநிலம் பிஹார் என்றும், அத்தகைய பிஹார் மண் ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கும் என எதிர்பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார். சென்னை திரும்பியதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த CM உத்தரவிடுவார் என நம்புவோம் என்றும் பதிவிட்டுள்ளார்.