News August 27, 2025
போர்க்குரல் எழுப்பியுள்ளது பிஹார்: CM ஸ்டாலின்

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல் காந்தி பிஹாரில் நடத்திவரும் யாத்திரையில் CM ஸ்டாலின் கலந்துகொண்டார். தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சமூக நீதி, மதச்சார்பின்மைக்காக 2,000 கிமீ கடந்து வந்துள்ளதாக கூறினார். இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து வருகிறது என்பதால் பிஹார் போர்க்குரல் எழுப்பியுள்ளதாக தெரிவித்தார். BJP-க்கு பயப்படாமல் அரசியல் செய்தவர் லாலு பிரசாத் யாதவ் என்றார்.
Similar News
News March 3, 2026
காங்கிரஸை சீண்டிய திமுக அமைச்சர்!

தேர்தலில் திமுக தனி மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்கும் என ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் பேசிய அவர், திமுகவுடன் இருந்தால்தான் சட்டப்பேரவைக்குள் நுழைய முடியும் என்பது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும் என்றும், அந்த அந்தஸ்தை இழக்க அவர்கள் விரும்பமாட்டார்கள் எனவும் தெரிவித்தார். <<19287048>>தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிக்கும் நிலையில்<<>>, காங்கிரஸை சீண்டும் வகையில் ரகுபதி பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
News March 3, 2026
பள்ளி மாணவி கர்ப்பம்.. சிறுவன் சிக்கினான்

புத்தகப் பையை சுமக்கும் வயதில், வயிற்றில் குழந்தையை சுமப்பது எத்தகைய கொடுமை? சிவகங்கையில் +1 மாணவியை கிஷோர் என்ற சிறுவன், பிரவீன், சாமியார் ராமநாதன் ஆகிய 3 பேரும் ரேப் செய்துள்ளனர். இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஹாஸ்பிடல் சென்றபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பெற்றோர் அளித்த புகாரில் மூவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளான்.
News March 3, 2026
தங்கம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

வருமான வரி விதிகளின்படி, வீட்டில் குறிப்பிட்ட அளவு நகைகளை மட்டுமே வைத்திருக்க முடியும். *திருமணமான பெண் – 500 கிராம். *திருமணமாகாத பெண் – 250 கிராம். ஆண்கள்( திருமணமானவர்கள்/ திருமணமாகாதவர்கள்) – 100 கிராம். இந்த வரம்பிற்கு மேல் நீங்கள் தங்க நகைகளை வைத்திருந்தால், வருமான வரி சோதனையின்போது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். அப்படி இல்லையெனில் நகைகள் பறிமுதல் செய்யப்படும். SHARE IT


