News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News January 11, 2026
கடையில் இஞ்சி பூண்டு பேஸ்ட் வாங்குறீங்களா? BIG DANGER!

இஞ்சி பூண்டு பேஸ்ட்டை காசை கொடுத்து கடையில் வாங்கி, உங்களுக்கு நீங்களே சூனியம் வைத்துக்கொள்கிறீர்களா? ஆம், பாக்கெட்டில் வரும் இந்த பேஸ்டுகளில், இஞ்சி பூண்டை விட எண்ணெய், உப்பு, மைதா, கெமிக்கல் அதிகமாக இருப்பதாக சமையல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், அஜீரணக் கோளாறு, ஃபுட் பாய்சன் என பல பிரச்னைகள் ஏற்படும் என்பதால், வீட்டிலேயே இதனை அரைத்து பயன்படுத்துங்கள் மக்களே. SHARE.
News January 11, 2026
காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்

புதுச்சேரி பாகூர் அருகே கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் 5 பேர், 9-ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. மாணவியை காதலித்த 17 வயது சிறுவன் பாகூர் அருகே அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கெனவே இருந்த 4 சிறுவர்களுடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த செயல் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
News January 11, 2026
PSLV C-62 ராக்கெட் கவுண்ட்டவுன் தொடங்கியது!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 10.17 மணிக்கு, PSLV C-62 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நிலையில், 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது. DRDO சேவைக்காக வடிவமைக்கப்பட்ட EOS N1 செயற்கைக்கோளுடன், பல்வேறு நாடுகளை சேர்ந்த 17 வணிக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன. இந்நிலையில் ராக்கெட், செயற்கைக்கோள்களின் ஒருங்கிணைப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாக ISRO தெரிவித்துள்ளது.


