News August 17, 2024

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

image

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News February 14, 2026

BREAKING: திமுக பேச்சாளர் சிவாஜிக்கு 3 ஆண்டுகள் சிறை

image

குஷ்பு மற்றும் கவர்னர் RN ரவி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கொடுங்கையூரில் நடைபெற்ற கூட்டத்தில் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News February 14, 2026

கர்ப்பிணி நடிகை வயிற்றில் உதைத்த கணவர்.. REWIND

image

நடிகை சரிதா, தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். மலையாள நடிகர் முகேஷை கரம்பிடித்த அவருக்கு, மண வாழ்க்கை சிறப்பாக அமையவில்லையாம். முகேஷ் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், தான் கர்ப்பமாக இருந்தபோது வயிற்றில் எட்டி உதைத்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சரிதா முன்வைத்துள்ளார். இருவரும் 2001-ல் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

News February 14, 2026

ஆட்சியில் பங்கு.. ராகுலின் நிலைப்பாடு இதுதானா?

image

ஆட்சியில் பங்கு தேவை என <<19139216>>மாணிக்கம் தாகூர்<<>> கூறிவரும் நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என RS பாரதி மறுத்துள்ளார். கூட்டணி ஆட்சியை TN மக்கள் ஏற்கமாட்டார்கள் என CM ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டதாக குறிப்பிட்ட அவர், அதை ராகுலும் ஏற்றுக்கொண்டதாக கூறினார். மேலும், மகளிருக்கு ₹5,000 வரவு வைத்த பிறகு மக்களின் ஆதரவு திமுகவிற்கு அதிகம் இருப்பதை உணர்ந்து இனி யாரும் ஆட்சியில் பங்கு பற்றி பேசமாட்டார்கள் என்றார்.

error: Content is protected !!