News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News February 20, 2026
FLASH: விலை 27,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

உங்கள் கனவு பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியென்றால் இந்த மாதத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், Kawasaki நிறுவனம், குறைந்தபட்சம் ₹20,000 முதல் ₹2.50 லட்சம் வரை பைக்குகளின் விலையை குறைத்துள்ளது. இது பிப்ரவரி இறுதி வரையே வழங்கப்படும். எனவே, அவை எந்தெந்த பைக்குகள், அவற்றின் விலை என்ன என்று மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக swipe செய்து பாருங்கள்.
News February 20, 2026
ராமதாஸுக்கு பின்னடைவு

மாம்பழ சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தொடர்ந்த மனுவை சென்னை HC தள்ளுபடி செய்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துவிட்டு HC-யிலும் வழக்கு தாக்கல் செய்வதா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனவும் நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
News February 20, 2026
ஆஹா… அடோப்பின் அனைத்து சாப்ட்வேர்களும் இனி இலவசம்!

இந்திய மாணவர்களுக்கு Adobe நிறுவனம் போட்டோஷாப் முதல் 20-க்கும் மேற்பட்ட கிரியேட்டிவ் கிளவுட் சாப்ட்வேர்களை இலவசமாக வழங்கப்போவதாக டெல்லி AI மாநாட்டில் அறிவித்துள்ளது. இந்திய அரசுடன் இணைந்து, இந்த சாப்ட்வேர்ஸ் நாடு முழுவதும் உள்ள அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவன மாணவர்களுக்கு கிடைக்கும். NASSCOM Futureskills Prime உடன் இணைந்து ‘AI-first learning’ சான்றிதழ்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.


