News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News January 9, 2026
பராசக்தியில் ஹிந்தி திணிப்பு வசனம் மாற்றம்

‘பராசக்தி’ படத்திற்கு தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், சுமார் 25 இடங்களில் கட் கொடுக்கப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணாவின் பிரபல முழக்கமான, ‘இங்கு அண்ணாதுரை தான் ஆள்கிறான்’ என்ற வசனம் நீக்கப்பட்டுள்ளது. மேலும், ‘தீ பரவட்டும்’ என்பதற்கு பதில் ‘நீதி பரவட்டும்’ என மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி திணிப்பு தொடர்பான வசனங்களும் மியூட் செய்யப்பட்டுள்ளன.
News January 9, 2026
இனி OTT தளத்திலும் ரீல்ஸ் பார்க்கலாம்!

இன்ஸ்டாகிராம், யூடியூபில் தான் இதுவரையிலும் ரீல்ஸ் பார்த்துட்டு இருந்தோம். இந்நிலையில், இனி OTT தளத்திலும் ரீல்ஸ் பார்க்கலாம்! ஆம், டிஸ்னி+ OTT தளத்தில் ரீல்ஸ் வடிவ வீடியோ வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. திரைப்படங்கள், சீரிஸ்கள் மட்டுமன்றி, ரீல்ஸ் வீடியோக்களை பயனர்கள் காணும் வகையில், வீடியோ கிளிப்புகளை கொண்டுவர உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
News January 9, 2026
ஜன 23-ல் மதுரை வருகிறாரா PM மோடி?

<<18787596>>PM மோடி<<>> ஜன.28-ல் TN வர உள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜன.23-ம் தேதியே அவர் மதுரைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்று, மதுரை அம்மா திடலில் PM தலைமையில் NDA கூட்டணியின் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. PM வருகைக்கு முன்னதாக சென்னை வரும் பியூஷ் கோயல் முன்னிலையில், தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


