News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News February 24, 2026
ரபேல் ஒப்பந்தம்.. அடம்பிடிக்கும் பிரான்ஸ்

114 ரபேல் போர் விமானங்களுக்கான பேச்சுவார்த்தையில், விமானங்களின் மூல குறியீடுகளை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள பிரான்ஸ் மறுத்துள்ளது. இந்த கட்டுப்பாடால் பிரான்சின் ஒப்புதல் இல்லாமல் இந்தியா, விமானத்தில் சில சென்சார்கள் மற்றும் ஆயுதங்களை ஒருங்கிணைக்கவோ அல்லது விமானத்தின் மென்பொருளை மேம்படுத்தவோ முடியாது. மூல குறியீடுகள் இல்லாமல், இந்தியா ரபேல் விமானங்களை சுதந்திரமாக கையாள முடியாது.
News February 24, 2026
மகாகவி பாரதியார் பொன்மொழிகள்

*சொல்வது தெளிந்து சொல்; செய்வது துணிந்து செய். *விழாமல் ஓடுவேன் என்பது நம்பிக்கை; விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்பது தன்னம்பிக்கை. *காயங்கள் குணமாக காலம் காத்திரு; கனவுகள் நினைவாக காயம் பொறுத்திரு. *மன உறுதி இல்லாதவனுடையை உள்ளம் குழம்பிய கடலுக்கு சமம். *எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு.
News February 24, 2026
நாய்க்கடி.. அச்சத்தில் தற்கொலை

மகாராஷ்டிரா மாநிலத்தில் வங்கி ஊழியர் ஒருவர் தெருநாய் கடித்ததால் பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். 30 வயதான இந்த நபரை சில நாட்களுக்கு முன் தெருநாய் கடித்துள்ளது. அவர், ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும், அவரது நடத்தையில் அசாதாரண மாற்றங்கள் இருந்ததாக அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும், தற்கொலை கடிதத்தில் ரேபிஸ் நோய் அச்சமே முடிவிற்கான காரணம் என எழுதியுள்ளார்.


