News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News December 31, 2025
TN-ல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை: அமித்ஷாவுக்கு நயினார் கடிதம்

திருத்தணி உள்ளிட்ட இடங்களில் வடமாநிலத்தவர் தாக்கப்படுவதை சுட்டிக்காட்டி அமித்ஷாவுக்கு நயினார் நாகேந்திரன் கடிதம் எழுதியுள்ளார். திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், சமீப நாள்களாக அது மிகவும் மோசமடைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமித்ஷாவுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
News December 31, 2025
டைப்ரைட்டிங் தேர்வுக்கு அப்ளை பண்ணியாச்சா?

குரூப்-4 தேர்வர்கள் டைப்ரைட்டிங் முடிச்சிருந்தா அவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த டைப்ரைட்டிங் தேர்வுக்கு இப்போதே நீங்கள் விண்ணப்பிக்கலாம். ➤கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 6-வது தேர்ச்சி ➤விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.01.2026 ➤தேர்வு தேதி: நிலைக்கேற்ப பிப்.7-15 வரை ➤ விண்ணப்பிக்க www.tndtegteonline.in என்ற இணையதளத்தை அணுகவும். SHARE IT!
News December 31, 2025
சற்றுமுன்: இளம் கிரிக்கெட் வீரர் காலமானார்

8 ஆண்டுகள் கோமாவில் இருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் அக்ஷு ஃபெர்னாண்டோ (25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். U19 போட்டிகளில் விளையாடி வந்த இவர், 2018-ம் ஆண்டு தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்நிலையில், அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


