News August 17, 2024

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

image

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News February 3, 2026

இனி தங்கம், வெள்ளி பதக்கங்கள் கிடைக்குமா?

image

விண்ணை முட்டும் அளவுக்கு தங்கம், வெள்ளியின் விலை தினமும் உயர்ந்து வருவதால், இனி விளையாட்டு, கல்வி நிறுவனங்களில் இந்த பதக்கங்கள் கொடுப்பது சிக்கலாகியுள்ளது. தங்கம், வெள்ளி பதக்கங்களுக்கு கூடுதல் செலவாகும் என்பதால், மாற்று உலகத்தை பயன்படுத்தலாமா என விளையாட்டுத்துறை நிர்வாகிகள், கல்வியாளர்கள் ஆலோசித்து வருகின்றனர். இதனால் பட்டமளிப்பு விழா, விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கத்தை பார்ப்பது கடினம்.

News February 3, 2026

விஜய்க்கு இதனால் பின்னடைவா?

image

பிப்ரவரி 2-வது வாரத்தில் விஜய், வேலூரில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், இந்நிகழ்ச்சி பிப்ரவரி இறுதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. அதேநேரம், நீண்ட நாள்களாக மக்கள் சந்திப்பு நடத்தாமல் இருப்பது, செய்தியாளர்களையே சந்திக்காமல் உள்ளது ஆகியவை விஜய்க்கு பின்னடைவை ஏற்படுத்தும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News February 3, 2026

டிரம்பிடம் சரணடைந்த மோடி: காங்கிரஸ்

image

இந்தியா தொடர்பான அனைத்து முடிவுகளும் வாஷிங்டனிலேயே(டிரம்ப்) எடுக்கப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர், வெனிசுலாவில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது, இந்தியா – US வணிக விவகாரம் என எல்லா முடிவுகளின் அறிவிப்பையும் டிரம்ப் மட்டுமே வெளியிடுகிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார். PM மோடி அவரிடம் முழுவதுமாக சரணடைந்துவிட்டதாகவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!