News August 17, 2024

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

image

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News February 23, 2026

கட்சி அங்கீகாரம் ரத்தானாலும் திமுக சின்னத்திலேயே போட்டி

image

தேர்தல்களில் 6 ஆண்டுகள் தனித்து போட்டியிடாதது, செலவு கணக்கை தாக்கல் செய்யாததது போன்ற காரணங்களால் மமகவின் அங்கீகாரத்தை ECI ரத்து செய்தது. இதனால், 2026-ல் மமக தனி சின்னத்தில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், <<19214915>>உதயசூரியன் <<>>சின்னத்திலேயே மமக போட்டியிடும் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார். இதனையடுத்து, தேர்தலில் போட்டியிட்டால் மட்டும் போதுமா, கட்சிக்கு அங்கீகாரம் வேண்டாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News February 23, 2026

CM ஸ்டாலின் தொகுதியில் 83,402 பேர் நீக்கம்

image

CM ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில், வாக்காளர் எண்ணிக்கை 2,07,251 ஆக குறைந்துள்ளது. SIR-க்கு முன்பு 2,90,653 வாக்காளர் இருந்த நிலையில், 1,03,812 லட்சம் பேர் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் 1,86,841 பேர் இடம்பெற்றனர். தற்போது, அதில் புதிய வாக்காளர் இணைப்பு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 20,410 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி, 2021 டூ 2026 கணக்கிட்டால் 83,402 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

News February 23, 2026

மகளிர் கடன் தள்ளுபடி.. தேர்தல் வாக்குறுதி அளித்தார்

image

அதிமுக ஆட்சி அமைந்தால், <<19153160>>மாற்றுத் திறனாளி கடன், கல்விக் கடன்<<>> உள்ளிட்டவை தள்ளுபடி செய்யப்படும் என EPS ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், சிறுபான்மையின மகளிர் தொழில் தொடங்க கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என அவர் தற்போது தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளார். மேலும், தீபாவளி பண்டிகைக்கு மகளிருக்கு இலவச பட்டுச் சேலை வழங்கப்படும் எனவும் EPS உறுதி அளித்துள்ளார்.

error: Content is protected !!