News August 17, 2024

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

image

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News February 2, 2026

டிகிரி போதும், ₹85,000 சம்பளம்.. நாளையே கடைசி!

image

சென்ட்ரல் வங்கியில் 300 மார்க்கெட்டிங் அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ➤வயது: 22 – 30 ➤கல்வித்தகுதி: டிகிரி முடித்திருக்க வேண்டும் ➤தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு & நேர்முக தேர்வு. ➤சம்பளம்: ₹48,480- ₹85,000 ➤பிப்.3-ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ➤ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். வேலை தேடும் நண்பர்களுக்கு இப்பதிவை ஷேர் செய்யவும்.

News February 2, 2026

நிதியை திமுக சரியாக பயன்படுத்தல: கிருஷ்ணசாமி

image

லோக்சபாவில் திமுக கூட்டணியின் 40 MP-க்கள் என்ன செய்கிறார்கள் என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கடமையை செய்யாமல் மத்திய அரசு மீது குற்றம்சாட்டுவதில் அர்த்தமில்லை என்ற அவர், நிதியை TN அரசு சரியாக பயன்படுத்துவதில்லை என்றார். மேலும், கிடைக்கும் நிதியை வைத்து திட்டங்களை TN அரசு சிறப்பாக செயல்படுத்திய பிறகு, ‘நிதி போதவில்லை’ என்று கேட்டால் அதற்கு நாங்களும் குரல் கொடுக்கத் தயார் என கூறியுள்ளார்.

News February 2, 2026

BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் பிரேமலதா

image

தேமுதிகவை மதித்து எந்த கூட்டணியில் அதிக இடம் வழங்குகிறார்களோ அவர்களுடனே கூட்டணி என பிரேமலதா உறுதியாக தெரிவித்துள்ளார். குமரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், நாளை(பிப்.3) கூட்டணி முடிவை தலைமை அலுவலகத்தில் அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். முன்னதாக வரும் சட்டப்பேரவை தேர்தல் மட்டுமல்ல அதனைத் தொடர்ந்து வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றி பெறும் என கூறினார்.

error: Content is protected !!