News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News December 16, 2025
திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்.. பக்தர்களுக்கு ஃப்ரீ!

திருப்பதியில் வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் நடைபெறுகிறது. இதில், ஜனவரி 2 முதல் 8-ம் தேதி வரை தரிசன டோக்கன் பெறாவிட்டாலும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 3 நாள்கள், டிசம்பர் 30 – ஜனவரி 1-ம் தேதி வரையிலான தரிசன டோக்கன்கள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவை அனைத்து ஏழுமலையானின் பக்தர்களுக்கும் பகிரவும்.
News December 16, 2025
விஜய்க்கு புதுச்சேரி CM பதிலடி

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இயங்கவில்லை என விஜய் சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை ஆகியவை பொதுமக்களுக்கு சென்றடைவதை கண்கூடாக பார்க்கலாம் என CM ரங்கசாமி பதிலடி கொடுத்துள்ளார். புதுச்சேரியில் பரப்புரை மேற்கொண்ட விஜய், ஆளும் NDA கூட்டணியில் உள்ள NR காங்கிரஸை விமர்சிக்காதது பேசுபொருளான நிலையில், ரங்கசாமி இவ்வாறு கூறியுள்ளார்.
News December 16, 2025
ஒரே நாளில் விலை ₹4,000 குறைந்தது

தங்கத்துடன் போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்து வந்த வெள்ளியின் விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ₹4,000 குறைந்துள்ளது. இதனால் சில்லறை வர்த்தகத்தில் 1 கிராம் ₹211-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,11,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் வெள்ளியின் விலை 1.53% குறைந்ததே இந்திய சந்தையில் வெள்ளி விலை சரிவுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


