News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News February 23, 2026
உடல் அமைப்பை காட்டும் உள்ளாடை.. நடிகை பகீர்

தென்னிந்திய சினிமா இயக்குநர்கள், நடிகைகளிடம் நடிப்பைத் தாண்டி கவர்ச்சியை எதிர்பார்ப்பதாக நடிகை டாப்ஸி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மார்பளவை காட்டும்படியான PAD வைத்த உள்ளாடையை அணியும்படி அவர்கள் கோரிக்கை விடுப்பதாக டாப்ஸி தெரிவித்துள்ளார். மேலும், தென்னிந்திய படங்களில் தொப்புளை காட்டும்படியான பல காட்சிகள் வைக்கப்படுவதாகவும் டாப்ஸி கூறியுள்ளார். அவரது கருத்தை எப்படி பார்க்கிறீங்க?
News February 23, 2026
மூத்த தலைவர் நல்லக்கண்ணு கவலைக்கிடம்

இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு கவலைக்கிடமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு 20 நாள்களுக்கு மேல் சென்னை ஸ்டான்லி அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இன்று மதியம் அவரின் உடல்நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 23, 2026
கட்சி அங்கீகாரம் ரத்தானாலும் திமுக சின்னத்திலேயே போட்டி

தேர்தல்களில் 6 ஆண்டுகள் தனித்து போட்டியிடாதது, செலவு கணக்கை தாக்கல் செய்யாததது போன்ற காரணங்களால் மமகவின் அங்கீகாரத்தை ECI ரத்து செய்தது. இதனால், 2026-ல் மமக தனி சின்னத்தில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், <<19214915>>உதயசூரியன் <<>>சின்னத்திலேயே மமக போட்டியிடும் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார். இதனையடுத்து, தேர்தலில் போட்டியிட்டால் மட்டும் போதுமா, கட்சிக்கு அங்கீகாரம் வேண்டாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


