News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News January 7, 2026
மம்தாவுக்கு மனநல சிகிச்சை தேவை: பாஜக

மே.வங்கத்தில் வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கு, பாஜக IT செல் உருவாக்கிய APP-ஐ ECI பயன்படுத்துவதாக <<18784581>>மம்தா பானர்ஜி<<>> குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் (பாஜக) சுவேந்து அதிகாரி, மம்தாவுக்கு மனநல சிகிச்சை தேவை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அப்படி சிகிச்சை பெறவில்லையெனில், சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 7, 2026
FLASH: அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 17 சீட்டு?

நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுகவுடன் இணைந்துள்ள பாமகவுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. NDA கூட்டணியில் பாமக இணைந்துள்ளதை <<18785984>>உறுதி செய்த EPS<<>>, தொகுதிகள் குறித்த விவரங்களை பின்னர் அறிவிப்போம் என்றார். ஆனால், பாமக தரப்பில், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியல் ஒன்றை அளித்துள்ளது. அதில், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூர் உள்ளிட்ட தொகுதிகள் உள்ளதாம்.
News January 7, 2026
மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி!

தனக்கு எதிராக பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கோரிய மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை HC-ல் நடந்துவரும் வழக்கில், ரங்கராஜின் கோடிக்கணக்கான வியாபாரத்தை பாதிக்கும் வகையில் அவரை பற்றி அவதூறு பரப்பி யூடியூபில் பணம் சம்பாதிப்பதாக வாதிடப்பட்டது. அதற்கு கிரிசில்டா தரப்பு, மகளிர் ஆணையம் உத்தரவிட்டும் ரங்கராஜ் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என வாதிட்டது.


