News August 17, 2024

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

image

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News January 7, 2026

டயாபடீஸை கட்டுப்படுத்த வாக்கிங் எப்படி உதவுகிறது?

image

தினமும் மேற்கொள்ளும் 30 நிமிட வாக்கிங் டயாபடீஸை கட்டுப்படுத்த பலவழிகளில் உதவுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *வாக்கிங் செல்லும்போது செயல்படும் அசைவுகள் தசை சுருக்கங்கள், இரத்த ஓட்டத்தை தூண்டும். *உணவுக்குப் பிறகு விறுவிறுப்பான நடைபயிற்சி செல்வது இரத்த சர்க்கரை குறைக்க உதவும். *சர்க்கரை நோய் உள்ளவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும். * நடைபயிற்சியால் சர்க்கரை நோயாளிகள் இரவு நன்றாக தூங்கலாமாம்.

News January 7, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 573
▶குறள்:
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். ▶பொருள்: பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.

News January 7, 2026

பாஜக IT செல் APP-ஐ பயன்படுத்தும் ECI: மம்தா

image

SIR பணிகளை எதிர்த்து வரும் மே.வங்க CM மம்தா பானர்ஜி ECI பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். மே.வங்கத்தில் வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்காக, பாஜக IT செல் உருவாக்கிய மொபைல் APP-ஐ ECI சட்டவிரோதமாகப் பயன்படுத்துகிறதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தகுதியான வாக்காளர்களை இறந்தவர்களாகக் காட்டுவது, வயதானவர்கள் நேரில் அழைப்பது என ஜனநாயகத்திற்கு விரோதமாக ECI செயல்படுவதாகவும் மம்தா சாடியுள்ளார்.

error: Content is protected !!