News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News February 13, 2026
மகளிர் உரிமைத் தொகை ₹2,000.. யாருக்கெல்லாம் கிடைக்காது?

இன்று உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள மகளிர் உரிமைத் தொகை ₹2,000 யாருக்கெல்லாம் கிடைக்கும் என சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.31 கோடி பயனாளிகளுக்கும் இத்தொகை கிடைக்கும். அதேநேரம், புதிதாக விண்ணப்பித்து ஒப்புதலுக்காக காத்திருப்பவர்களுக்கு தேர்தல் முடிந்தாலும் சில மாதங்கள் கழித்தே கிடைக்கும். ஏனென்றால், அதற்கான பணிகள் தொடங்க தாமதமாகும் என கூறப்படுகிறது.
News February 13, 2026
ஜன நாயகன் பட புதிய ரிலீஸ் தேதி இதுவா?

‘ஜன நாயகன்’ படத்திற்கு சென்சார் வழங்கக் கோரிய வழக்கை தயாரிப்பு நிறுவனம் வாபஸ் பெற்றது. இதனையடுத்து மீண்டும் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு, பிப்.20-ல் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், சான்றிதழ் தாமதமாகும் என்பதால், அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாம். குறிப்பாக, மார்ச் 5 (அ) 6-ல் படம் ரிலீஸாகலாம் என கூறப்படுகிறது.
News February 13, 2026
கடன் வாங்கி உரிமைத் தொகை கொடுத்தாரா CM?

மகளிருக்கு ₹5,000 வரவு வைக்கப்பட்டது தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என அன்புமணி விமர்சித்துள்ளார். கூடுதலாக ₹6,550 கோடி கடன் வாங்கித்தான் இத்தொகை வழங்கப்பட்டிருப்பதாக கூறிய அவர், ஏற்கெனவே வாங்கி குவித்திருக்கும் ₹10 லட்சம் கோடி கடன் போதவில்லையா எனவும் கேட்டுள்ளார். மேலும், வரிகள் மூலம் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்து ஆண்டுக்கு சுமார் ₹25,000 கூடுதலாக பறிக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.


