News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News February 21, 2026
ஊதியத்துடன் விடுமுறை.. தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

பணி நிரந்தரம், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திமுக அரசுக்கு எதிராக ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், நிரந்தரப் பணியாளர்களைப் போலவே, அரசு ஹாஸ்பிடலில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பு ஒப்பந்த செவிலியர்களுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News February 21, 2026
புயல் சின்னம்.. கனமழை பொளந்து கட்டும்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 2 நாள்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. அதேபோல், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகரில் நாளை கனமழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
News February 21, 2026
காவி சிந்தனையில் EPS: செல்வப்பெருந்தகை

உயர் சிந்தனைகளை உலகிற்கு அளித்த திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைக்கும் வகையில் <<19199967>>காவி உடை அணிவித்து EPS <<>>பதிவிட்டிருப்பதாக செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். RSS & பாஜகவுடன் இணைந்ததும் அவரின் சிந்தனை காவிமயமாகிவிட்டது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். திருவள்ளுவர் எந்த ஒரு மதத்திற்கும், சாதிக்கும், அரசியலுக்கு கட்டுப்பட்டவர் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


