News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News February 20, 2026
படுக்கைக்கு அழைப்பு.. பிரபல தமிழ் நடிகை பரபரப்பு

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது (CASTING COUCH) குறித்து நடிகை மதுமிதா பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். அய்யனார் துணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள அவர், சினிமாத் துறையில் இருந்தால் நிச்சயமாக CASTING COUCH-ஐ எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் அதை ஜாக்கிரதையாக எதிர்கொள்ள வேண்டும் என்றும், CASTING COUCH-ஐ தைரியமாக எதிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News February 20, 2026
விஜய் கட்சியில் இணைந்தார்.. டிடிவி தினகரன் அதிர்ச்சி

டெல்டாவில் அமமுகவின் முக்கிய முகமாக இருந்த வழக்கறிஞர் மதியழகன் தவெகவில் இணைந்துள்ளார். அமமுகவின் தஞ்சை மாநகர மாவட்ட பொருளாளராக இருந்த அவர், புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். திமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்ததை அடுத்து, NDA-வில் கூடுதல் தொகுதிகளை பெற TTV தினகரன் திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், முக்கிய நிர்வாகி விலகியது அவருக்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது.
News February 20, 2026
தீய சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்போம்: விஜய்

அஞ்சலை அம்மாளின் நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தினார். போராட்டக் களத்தில் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை அஞ்சலை அம்மாள் அன்றே நிரூபித்தவர் என தனது X பதிவில் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், தன் வாழ்வையே நாட்டுக்காக அர்ப்பணித்த அவரது வழியில், தீய சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க உறுதியேற்போம் என பதிவிட்டுள்ளார்.


