News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News January 22, 2026
ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு விரைவில் புதிய அம்சம்!

பிரபல கிளவுட் சேவையான Google Photos-ஐ பயன்படுத்தும்போது, பின்னணியில் நிகழும் sync காரணமாக போனில் சார்ஜ் வேகமாக குறைகிறது. இதனை சரிசெய்ய விரைவில் கூகுள் புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதனால் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுள் மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். போனின் பேட்டரி நிலைக்கு ஏற்ப புத்திசாலித்தனமாக இயங்கும்.
News January 22, 2026
சாய் பாபா பொன்மொழிகள்

*பத்துப் புத்தகங்களைப் படித்ததால் மட்டுமே நீங்கள் படித்தவர்கள் இல்லை. *பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட சேவை செய்யும் கைகள் புனிதமானவை. *ஒருவரையொருவர் நேசியுங்கள், அன்பைப் பொழிவதன் மூலம் மற்றவர்கள் உயர்ந்த நிலைக்கு உயர உதவுங்கள். *நல்ல நடத்தையே கல்வியறிவு பெற்றவரின் அடையாளம். *தந்தை, தாய் மற்றும் ஆசிரியர் மூவரும் ஒரு நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முதன்மையானவர்கள்.
News January 22, 2026
OpenAI-க்கு ஆபத்து: ஜார்ஜ் நோபுள்

OpenAI விரைவில் சரிந்துவிடும் என்று பிரபல முதலீட்டாளரான ஜார்ஜ் நோபுள் கணித்துள்ளார். கூகுள் ஜெமினி பயனர்கள் வளர்ந்து வரும் நிலையில், ChatGPT போக்குவரத்து தொடர்ந்து 2 மாதங்களாகக் குறைந்துள்ளது. OpenAI, ஒரே காலாண்டில் $12 பில்லியனை இழந்துள்ளது. திறமையான ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். இதையெல்லாம் கருத்தில்கொண்டு பார்க்கும்போது OpenAI பிழைப்பது கடினம் என்று எச்சரித்துள்ளார்.


