News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News January 28, 2026
திருக்குறளை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி முர்மு

நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி முர்மு திருக்குறளை மேற்கோள்காட்டியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. திருவள்ளுவர் கூறுவது போல், எந்த தொழில் செய்பவராக இருந்தாலும், விவசாயத்தை சார்ந்துதான் இருக்கவேண்டும் என கூறியுள்ளார். மேலும், இந்த ஆட்சியில் உணவுப் பொருள் இறக்குமதியை குறைக்க, எண்ணெய் பயிர்கள் உற்பத்திக்கான தேசிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News January 28, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
News January 28, 2026
25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு: முர்மு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முதல்நாள் நிகழ்வில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசியுள்ளார் முர்மு. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 11 கோடிக்கும் அதிகமானோர், இலவச மருத்துவ சிகிச்சையை பெற்றிருப்பதாக கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 10 வருடங்களில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.


