News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News February 19, 2026
FLASH: நள்ளிரவில் தமிழக மீனவர்கள் அதிரடி கைது

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். அவர்களின் 2 விசைப்படகுகள், மீன்கள், வலைகள் உள்ளிட்ட உடைமைகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. நேற்று முன்தினம் <<19154691>>காரைக்கால் மீனவர்கள் 25 பேரை <<>>கைது செய்த நிலையில், மீண்டும் இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளதாக மீனவர்களின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
News February 19, 2026
மகளிருக்கு மாதம் ₹5000 வழங்கலாம்: கார்த்தி சிதம்பரம்

மகளிருக்கு கொடுக்கும் பணம் அரசின் கடன் சுமையை அதிகரிக்கும் என்றாலும், வரிகள் மூலம் அந்த பணம் அரசுக்கு வந்துவிடும் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். பெண்களுக்கு மாதம் ₹2,500 கொடுப்பது நல்ல பொருளாதார யுக்தி என தெரிவித்த அவர், பெண்கள் மளிகை கடைகளில்தான் இதை செலவு செய்ய போகிறார்கள் என்றும் கூறியுள்ளார். மாதம் ₹5000 கொடுத்தாலும் தப்பில்லை என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
News February 19, 2026
தவெக கூட்டணியில் இணையும் முதல் கட்சி

ஆட்சியில் பங்கு என்ற ஆஃபரை கொடுத்தும் இதுவரை தவெக பக்கம் எந்த கட்சியும் கூட்டணிக்கு செல்லவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் , TN-ல் மட்டும் தவெகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக வந்த புதுவை பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம், ரங்கசாமி இந்த தகவலை சொல்லி ஷாக் கொடுத்துள்ளாராம்.


