News August 17, 2024

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

image

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News February 15, 2026

வெள்ளி விலை குறைந்தது.. வியாபாரிகள் சொல்வது என்ன?

image

தொடர் விலை சரிவால் வெள்ளியில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா என பலரும் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து பிரபல நகைக்கடை உரிமையாளரிடம் பேசினோம். அப்போது, 2 வாரங்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹1,45,000 சரிந்து தலைகீழாக மாறியுள்ளது. அதனால், வெள்ளி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முதலீடு நோக்கத்தில் பெரிய அளவில் வெள்ளியை வாங்குவது சரியானதாக இருக்காது என்றார். அதனால், சிந்தித்து செயல்படுங்கள்.

News February 15, 2026

எத்தனை பேருக்கு இந்த கார்ட் ஞாபகம் இருக்கு?

image

இன்று 1.5GB தினசரி டேட்டாவில் போனிலேயே மூழ்கி இருக்கும் Gen Z ஜெனரேஷனுக்கு இதன் அருமை தெரியாது. ஒரே ஒரு போட்டோ டவுன்லோடாக 1 மணி நேரம் எடுத்த காலம் அது. ஆனாலும் அந்த காத்திருப்பில் ஒரு சுகம் இருந்தது. எவ்வளவு நெட் போடணும், என்ன பாக்கணும் என்பது அன்று நமது கன்ட்ரோலில் இருந்தது. ஆனால், இன்று அதீத நெட் வசதியால், போன்தான் நம்மை கட்டுப்படுத்துகிறது. உங்களில் எத்தனை பேர் இதை யூஸ் பண்ணியிருக்கீங்க?

News February 15, 2026

தேமுதிகவிடம் கறார் காட்டும் திமுக, அதிமுக!

image

தேமுதிக 2 இலக்கத்தில் சீட் கேட்பதால் மாறி மாறி பேரம் பேசி திமுகவும், அதிமுகவும் டயர்ட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இனி ஒற்றை இலக்கம்தான் கொடுப்போம், ஏத்துக்கிட்டா கூட்டணிக்கு வாங்க என தேமுதிகவிடம் இருதரப்பும் கறார் காட்டியிருக்கிறதாம். இந்நிலையில், இதனை ஏற்று பிரதான கட்சிகளான அதிமுக, திமுக இரண்டில் ஒன்றை பிரேமலதா தேர்வு செய்வாரா (அ) தவெக பக்கம் சாய்வாரா என கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!