News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News December 11, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஸ்பெஷல் அறிவிப்பு

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுகளுடன் ரொக்கப்பணம் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது ரேஷன் அட்டைதான். இந்நிலையில், ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்ற சேவைகள் ஒரே நாளில் வழங்கும் வகையில், சனிக்கிழமை (13.12.2025) அன்று சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை குடும்ப அட்டைதாரர்கள் மிஸ் செய்யாதீங்க.
News December 11, 2025
BREAKING: டிச.15 முதல் விருப்ப மனு: EPS

2026 தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் டிச.15 – டிச. 23 வரை விருப்ப மனு பெறலாம் என EPS அறிவித்துள்ளார். முதல் நாளான 15-ம் தேதி மட்டும் நண்பகல் 12 மணிக்கு (நல்ல நேரம்) தொடங்குகிறது. மற்ற நாள்களில் காலை 10 – மாலை 5 மணி வரை விருப்ப மனுவை பெறலாம். மேலும், மனுவில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 11, 2025
விஜய்யின் ஆசைக்கு அளவில்லை: கோவி.செழியன்

தமிழக மக்களையே வென்றெடுக்க முடியாத விஜய், புதுச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்பது வேடிக்கையாக உள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். விஜய்யின் பேச்சு, ‘கூரை ஏறி கோழி பிடிக்காதவர், வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவேன்’ என்பது போன்று இருந்ததாகவும் அவர் விமர்சித்தார். மேலும், ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் நடிகர் விஜய் தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.


