News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News December 26, 2025
கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

கனடாவில் மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர் ஷிவாங்க் அவஸ்தி, Toronto Scarborough பல்கலை.,-க்கு அருகே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், அவஸ்தியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. கனடாவில் இந்த ஆண்டின் 41-வது கொலை சம்பவம் இது என்பதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
News December 26, 2025
மோசடியில் சிக்கினார் ஜிவி பிரகாஷ்

சைபர் கிரிமினல்களின் மோசடி வலையில் தற்போது பிரபலங்களும் சிக்க தொடங்கியுள்ளனர். தாயின் இறுதிச்சடங்கிற்கு பணம் தேவை என SM-ல் கேட்டவருக்கு ஜிவி பிரகாஷ் ₹20,000 அனுப்பி உதவியுள்ளார். ஆனால், அந்த நபர் 5 ஆண்டு பழைய போட்டோவை பயன்படுத்தி ஏமாற்றியது தெரியவந்தது. பணத்தின் மீதான ஆசையில் தாய் இறந்ததாக கூறிய அந்த அருவருப்பான நபரை போலீஸ் கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்துகின்றனர்.
News December 26, 2025
அதிமுகவுக்கு CM ஓபன் சேலஞ்ச்!

திமுக அரசு நிகழ்த்திய சாதனைகளில் 5%-ஆவது அதிமுக ஆட்சியில் நடந்தது என சொல்லமுடியுமா என ஓபன் சேலஞ்சாக கேட்கிறேன் என CM ஸ்டாலின் பேசியுள்ளார். கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அவர், சிலரை போல் வாயில் வடை சுடும் அரசு அல்ல. ஆட்டோமொபைல் உற்பத்தி, போக்குவரத்து, வேலைவாய்ப்பு, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் திமுக முதலிடத்தில் உள்ளது. இனி எப்போதும் ஏறுமுகம் தான் என கூறியுள்ளார்.


