News May 15, 2024

நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி மோசடி (3)

image

இந்த மோசடி தொடர்பாக 2020இல் ராணா கபூர், தீரஜ் வதாவனை ED கைது செய்தது. தொடர்ந்து, 2022இல் சிபிஐ தீரஜை கைது செய்ய, அவர் சிறையிலேயே சொகுசாக வாழ்வதாகவும், உடல்நிலையை காரணம் காட்டி நாள் கணக்கில் மருத்துவமனையிலேயே தங்கி இருப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2023ல் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று வெளியில் வந்த அவரை, உச்சநீதிமன்றம் சென்று மீண்டும் கைது செய்ய சிபிஐ அனுமதி பெற்றது.

Similar News

News October 17, 2025

யார் இந்த ரிவாபா ஜடேஜா?

image

குஜராத் மாநில அமைச்சரவையில் இணைந்துள்ள கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார். 2019-ல் BJP-ல் சேர்ந்த இவர், 2022 தேர்தலில் வடக்கு ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட்டு 53,570 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். Karni Sena அமைப்பின் மகளிர் பிரிவு தலைவராகவும் உள்ளார். இவரது உறவினர் ஹரி சிங் சோலங்கி ராஜ்கோட்டின் மூத்த காங்கிரஸ் தலைவர் ஆவார்.

News October 17, 2025

BREAKING: அதிரடியாக கைது செய்தது சிபிஐ

image

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறை வாகன ஓட்டுநர் ரவிச்சந்திரனை CBI அதிரடியாக கைது செய்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 6-வது நபராக ரவிச்சந்திரனை கைது செய்த CBI அதிகாரிகள் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர், முன்னதாக கைது செய்யப்பட்ட போலீசாருக்கு எதிராக சாட்சியங்கள் அளித்திருந்தார்.

News October 17, 2025

கடல் நீர் உப்பாக இருப்பது ஏன்?

image

ஆத்து தண்ணி சுவையா இருக்கு, ஆனா இதிலிருந்து கடலுக்கு போற தண்ணி ஏன் உப்பா இருக்குன்னு தெரியுமா? நிலத்தில் விழும் மழைநீர் பாறை, மணலில் உள்ள தாது, உப்புகளை அடித்துச்சென்று ஆறுகளில் கலக்கிறது. இந்த ஆறுகள் உப்பு நிறைந்த நீரை கடலில் கொண்டு சேர்க்கின்றன. கடலில் உள்ள இந்த நீர் கடும் வெயிலால் ஆவியாகிறது. எனவே உப்பு கடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால்தான் கடல்நீர் எப்போதும் உப்பாகவே இருக்கிறது. SHARE.

error: Content is protected !!