News May 15, 2024

நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி மோசடி (2)

image

அதற்கு கைமாறாக யெஸ் வங்கி இணை நிறுவனர் ராணா கபூருக்கு ₹40 கோடி மதிப்பிலான நிலத்திற்கு ₹600 கோடி DHFL கடன் வழங்கியுள்ளது. அதேபோல், யெஸ் வங்கியிலிருந்து BRPL நிறுவனத்தின் பெயரில் ₹1,700 கோடி கடன் பெறும் திட்டத்தையும் DHFL முன்வைத்திருந்தது. இப்படி, போலி நிறுவனங்களின் பெயரிலும், தரமற்ற சொத்துக்களை அடமானம் வைத்தும் பல கோடி மோசடிகளை DHFL அரங்கேற்றி வந்தது சிபிஐ, ED விசாரணையில் தெரியவந்தது.

Similar News

News November 24, 2025

Cyclone Alert… கனமழை வெளுத்து வாங்கும்

image

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று(நவ.24) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், குமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 29-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. SHARE IT.

News November 24, 2025

இந்தியாவுடன் AI பார்ட்னர்ஷிப் அமைக்கும் ஜப்பான்

image

நேற்றைய ஜி20 மாநாட்டிற்கு மத்தியில் PM மோடி, ஜப்பான் PM டக்காய்ச்சி தானே உடன் சுமார் 35 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக செமிகண்டக்டர் மற்றும் AI உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News November 24, 2025

தென்காசியில் 2 பஸ்கள் விபத்து.. நடந்தது எப்படி?

image

தென்காசி இடைகால் அருகே 2 <<18373837>>தனியார் பஸ்கள்<<>> நேருக்குநேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். இதில், 5 பேர் பெண்கள் என்பது தெரியவந்துள்ளது. இவ்விபத்தில் 2 பஸ்களின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கின. திருமங்கலம் – கொல்லம் நெடுஞ்சாலையில் செல்லும் சில பஸ்கள், போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, அதிவேகமே இவ்விபத்துக்கு காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

error: Content is protected !!