News May 15, 2024
நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி மோசடி (2)

அதற்கு கைமாறாக யெஸ் வங்கி இணை நிறுவனர் ராணா கபூருக்கு ₹40 கோடி மதிப்பிலான நிலத்திற்கு ₹600 கோடி DHFL கடன் வழங்கியுள்ளது. அதேபோல், யெஸ் வங்கியிலிருந்து BRPL நிறுவனத்தின் பெயரில் ₹1,700 கோடி கடன் பெறும் திட்டத்தையும் DHFL முன்வைத்திருந்தது. இப்படி, போலி நிறுவனங்களின் பெயரிலும், தரமற்ற சொத்துக்களை அடமானம் வைத்தும் பல கோடி மோசடிகளை DHFL அரங்கேற்றி வந்தது சிபிஐ, ED விசாரணையில் தெரியவந்தது.
Similar News
News October 24, 2025
தங்கம் விலை மீண்டும் மாறப்போகிறது

கடந்த வாரத்தில் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், கடந்த 5 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹5,600 சரிவை கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதே. ஆனால் இன்று காலை முதலே சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக தங்கத்தின் விலை இன்று மாற வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
News October 24, 2025
நெஞ்சு சளி நீங்க இந்த கசாயத்தை குடிங்க!

தேவை: கற்பூரவள்ளி, துளசி, வெற்றிலை, இஞ்சி, மிளகு, சீரகம் *செய்முறை: வெந்நீரில் தலா 5 கற்பூரவள்ளி & துளசியை சேர்க்கவும். பின்னர், வெற்றிலையின் காம்போடு நரம்பை நீக்கிவிட்டு அதனுடன் சேர்க்கவும். அடுத்ததாக, மிளகு, இஞ்சி, சீரகத்தை இடித்து சேர்க்கவும். இவற்றை நன்கு கொதிக்கவிட்டு, அடுப்பை அணைத்து வடிகட்டி ஆறவைத்து குடிக்கலாம். இது நெஞ்சு சளியை விரட்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
News October 24, 2025
கூட்டணிக்காக ADMK அலையவில்லை: செல்லூர் ராஜூ

கரூர் விவகாரத்தை பயன்படுத்தி தவெகவுடன் கூட்டணி வைக்க EPS முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டிய CM ஸ்டாலினுக்கு, செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், அதிமுக எந்த காலத்திலும் கூட்டணிக்காக அலைந்ததில்லை. எங்கள் கொள்கையோடு மக்களை காப்பாற்ற யார் வந்தாலும் அவர்களை தூக்கி கொண்டாடுவோம். அதேநேரம் எங்கள் காதை கடித்தால், தூக்கி காலுக்கு கீழே போட்டு மிதிப்போம் என்று தெரிவித்துள்ளார்.


