News March 29, 2024
பெரும் அதிர்ச்சி: தேர்தல் அதிகாரி தற்கொலை

தமிழகம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சேலம் மேட்டூரில் தேர்தல் அதிகாரி நர்மதா (37) தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 21, 2025
தக்காளி, முருங்கை, வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு!

சத்தமில்லாமல் சாம்பார் வெங்காயம், தக்காளி, முருங்கை உள்ளிட்ட காய்கறிகள் விலை கடும் உயர்வை கண்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இம்மாத தொடக்கத்தில் ₹50-க்கு விற்பனையான 1 கிலோ முருங்கை ₹200 ஆக உயர்ந்துள்ளது. தக்காளி, சாம்பார் வெங்காயம் 1 கிலோ ₹50 – ₹70-க்கும், மழை காரணமாக வரத்து குறைந்ததால் வரும் நாள்களில் காய்கறிகள் மேலும் உயர வாய்ப்புள்ளது.
News November 21, 2025
விஜய் மக்கள் பாதுகாப்பு படைக்கு தீவிர பயிற்சி

கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் <<18345318>>சேலத்தில்<<>> இருந்து தனது பரப்புரையை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், கரூரை போல எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க, அக்கட்சியின் மக்கள் பாதுகாப்பு படைக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற ராணுவ, போலீஸ் அதிகாரிகளை வைத்து பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில், சேலத்தில் அவர்கள் களத்தில் இறக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
News November 21, 2025
இன்றுடன் விடைபெறும் CJI கவாய்

சுப்ரீம் கோர்ட் CJI-ஆக BR கவாய்க்கு இன்று கடைசி நாளாகும். வரும் 23-ம் தேதியுடன் அவர் அப்பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். நாட்டின் 53-வது CJI-ஆக சூர்யகாந்த் வரும் 24-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். முன்னதாக நேற்று நடந்த பிரியாவிடை நிகழ்ச்சியில், தான் புத்த மதத்தை பின்பற்றினாலும், அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் மதச்சார்ப்பற்றவனாக இருந்தேன் என கவாய் தெரிவித்தார்.


