News March 29, 2024

பெரும் அதிர்ச்சி: தேர்தல் அதிகாரி தற்கொலை

image

தமிழகம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சேலம் மேட்டூரில் தேர்தல் அதிகாரி நர்மதா (37) தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News January 23, 2026

ஆர்டர் பண்ணாமலே பொருள் வருதா… கவனமா இருங்க

image

Flipkart, Amazon ஆகியவற்றில் ஆர்டர் செய்யாமலே உங்களுக்கு பொருள் வந்துள்ளது என கூறி சிலர் நூதன மோசடி செய்து வருகிறார்கள். அந்த ஆர்டரை கேன்சல் பண்ண, ஒரு கஸ்டமர் கேர் நம்பரை கொடுக்கிறார்கள். நீங்கள் அதில் அழைத்து பேசினால், ஒரு OTP-யை அனுப்புகிறார்கள். அதை நீங்க சொன்ன உடனேயே, உங்க போன் நம்பருடன் லிங்க் ஆகியிருக்கும் பேங்க் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை எடுத்து விடுகின்றனர்.

News January 23, 2026

இனி மாதந்தோறும் ₹3,000 பென்ஷன்.. அரசின் திட்டம்

image

அமைப்புசாரா தொழிலாளர்கள்(கட்டட வேலை, தினக்கூலி, நிரந்த வேலை இல்லாதவர்கள்) வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு இ-ஷ்ரம் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ₹3,000 பென்ஷன் கிடைக்கும். இத்திட்டத்தில் இணைய 18 -40 வயதுக்குள் இருக்க வேண்டும், ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் <>eshram.gov.in<<>> வாயிலாக உடனடியாக அப்ளை பண்ணுங்க.

News January 23, 2026

பேரவையில் முக்கிய தீர்மானம் நிறைவேறியது

image

மத்திய அரசின் ‘VB-G RAM G’ திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் கொண்டுவந்த <<18932257>>தீர்மானம்<<>> நிறைவேறியது. தீர்மானத்தை CM முன்மொழியும்போது, திமுக ஏதோவொரு தோற்றத்தை உருவாக்கும் நோக்கில் இதை செய்வதாக EPS விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த CM ஸ்டாலின், PM மோடியை சந்திக்கும் EPS இத்தீர்மானம் பற்றி எடுத்துச் சொல்வார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!