News March 29, 2024
பெரும் அதிர்ச்சி: தேர்தல் அதிகாரி தற்கொலை

தமிழகம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சேலம் மேட்டூரில் தேர்தல் அதிகாரி நர்மதா (37) தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 24, 2025
ஏற்றம் கண்டு சரிவில் முடிந்த சந்தைகள்!

வாரத்தின் முதல் நாளான இன்று காலையில் ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் மாலையில் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 331 புள்ளிகள் சரிந்து 84,900 புள்ளிகளிலும், நிஃப்டி 108 புள்ளிகள் சரிந்து 25,959 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. Reliance, ICICI Bank, TCS உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளன. நீங்கள் வாங்கிய SHARE உங்களுக்கு லாபம் தந்ததா?
News November 24, 2025
மழை வரப்போகுதா? இதை வைத்து கண்டுபிடிக்கலாம்

வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவது மழைக்கான அறிகுறியாக இருந்தாலும், சில நேரங்களில் காற்று மேகக் கூட்டத்தை கலைத்துவிடும். ஆனால், மழை வருவதை எளிதாக தெரிந்துகொள்ள சில உயிரினங்கள் நமக்கு பெரும் உதவியாக உள்ளன. அதன்படி, மழை வரப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 24, 2025
BREAKING: இந்தியா அபார வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கபடியில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. டாக்காவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா, சீன தைபே அணிகள் மோதின. முதல் பாதியில் 20-16 என்ற கணக்கில் முன்னிலை வகித்த இந்தியா, 2-ம் பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்தது. இறுதியில் இந்தியா 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. சாதனை மகளிருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.


