News January 19, 2026
BIG NEWS: விஜய் மீது CBI வழக்கு.. டெல்லியில் பரபரப்பு

கரூரில் 41 பேர் பலியான வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயரை சேர்க்க CBI திட்டமிட்டுள்ளதாம். 2 நாள்கள் விஜய்யிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு இந்த முடிவுக்கு அதிகாரிகள் வந்துள்ளதாகவும், தேர்தலுக்கு முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கரூர் காவல் நிலைய FIR-ல் புஸ்ஸி ஆனந்த், CTR நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் ஆகியோர் பெயர்கள் உள்ளன.
Similar News
News February 8, 2026
நகைக் கடன் தள்ளுபடி முடிவு.. வந்தாச்சு HAPPY NEWS

<<19007011>>கல்விக் கடன், மாற்றுத் திறனாளி கடன்<<>> போன்றவை தள்ளுபடி செய்யப்படும் என அதிமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இந்நிலையில், கடந்த தேர்தலைப்போல், இப்போதும் நகைக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கான நடவடிக்கையை திமுக அரசு தொடங்கிவிட்டதாம். கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் இருக்கும் நகைக் கடன் விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் நல்ல செய்தி வெளியாகும்.
News February 8, 2026
TNPSC குரூப் 2 தேர்வு ரத்தானதால் அதிரடி மாற்றம்

குரூப்-2, 2ஏ <<19082017>>தேர்வுகள் <<>>கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக அரசு அதிரடி மாற்றம் செய்துள்ளது. தேர்வு மையங்களில் குளறுபடி ஏற்பட்டதால் சென்னை உள்பட பல இடங்களில் தேர்வர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சண்முகசுந்தரம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் புதிய அலுவலராக வெங்கட பிரியாவை அரசு நியமித்துள்ளது.
News February 8, 2026
அஜித்துடன் கைகோர்க்கும் விஜய் பட தயாரிப்பாளர்?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு, அஜித்தை வைத்து ரீமேக் படம் ஒன்றை எடுக்க முடிவு செய்துள்ளாராம். மலையாள திரைப்படமான ‘மார்கோ’ ரீமேக்கிற்காக அஜித்தை அணுகிய ராஜு, அவருடைய பதிலுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. ஒருபக்கம் கார் ரேஸிங்கில் பிஸியாக இருக்கும் அஜித், அடுத்து AK64-ல் நடிக்க இருக்கிறார். இதனால், தில் ராஜுவின் ரீமேக் பிளானில் இணைவாரா என்பது சந்தேகம்தான்.


