News September 3, 2024
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றம்!

வந்தே பாரத் ரயில்களை போல ‘வந்தே மெட்ரோ’ ரயில்களும் தயாரிக்கப்படுகின்றன. இதில், பெரம்பூர் ICF தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ஒரு வந்தே மெட்ரோ ரயில், சோதனை ஓட்டத்துக்கு பிறகு, சென்னை பீச் – திருப்பதி இடையே இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த ரயில் மும்பையில் இயக்கப்படவுள்ளதாக தற்போது ரயில்வே தரப்பில் கூறப்படுவதால் திருப்பதி பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Similar News
News July 10, 2025
குஜராத் பாலம் இடிந்து விபத்து… பலி 11 ஆக உயர்வு

குஜராத்தில் பாலம் இடிந்து ஆற்றுக்குள் வாகனங்கள் விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. வதோதரா மாவட்டம் மஹிசாகர் ஆற்றின் மீது கட்டப்பட்டு இருந்த 40 ஆண்டுகால பழமையான பாலம் இடிந்து விழுந்தது. இதில் பாலம் மீது சென்ற வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. இந்த விபத்தில் 2 சிறார்கள் உள்பட மொத்தம் 11 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மேலும் 1 பெண் உள்ளிட்ட 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News July 10, 2025
ராசி பலன்கள் (10.07.2025)

➤ மேஷம் – ஊக்கம் ➤ ரிஷபம் – அமைதி ➤ மிதுனம் – ஈகை ➤ கடகம் – ஓய்வு ➤ சிம்மம் – மறதி ➤ கன்னி – ஜெயம் ➤ துலாம் – திடம் ➤ விருச்சிகம் – பகை ➤ தனுசு – பரிசு ➤ மகரம் – தடை ➤ கும்பம் – வரவு ➤ மீனம் – ஆசை.
News July 10, 2025
இலங்கைத் தமிழருக்கு குடியுரிமை: சசி கோரிக்கை

TN-ல் உள்ள முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு நடிகர் சசிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிநாடுகளில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுப்பதாக தெரிவித்த அவர் தமிழ் மொழி பேசுபவர்கள் வேறு நாட்டில் இருந்து இங்கு வந்தாலும், இங்க இருந்து முன்பு போனவர்களாக தான் இருப்பார்கள் எனவும் கூறியுள்ளார். ‘ஃப்ரீடம்’ சிறப்பு காட்சிக்கு பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசியுள்ளார்.