News March 25, 2025
BIG BREAKING: உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிப்பு

நகர்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் மே மாதம் நடத்தப்படவுள்ளது. மொத்தம் காலியாகவுள்ள 448 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும் தொடங்கியுள்ளன. சென்னையில் 4 வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது.
Similar News
News November 15, 2025
சறுக்கலில் இருந்து சாதனைக்கு

ராம்விலாஸ் பாஸ்வானின் வாரிசு என்றாலும், 2020 தேர்தலில் பெற்ற படுதோல்வி சிராக் பாஸ்வானின் அரசியலுக்கு முடிவுரை எழுதிவிட்டதாகவே பலரும் கணித்தனர். ஆனால், 2024 எம்பி தேர்தலில் பாஜகவிடம் போராடி 5 தொகுதிகள் வாங்கி, ஐந்திலும் வென்று நான் திரும்ப வந்துட்டேன் என்றார். இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலிலும் போராடி தான் 29 தொகுதிகள் பெற்றார். அதில் 19-ல் முன்னிலை பெற்றிருக்கிறது சிராக்கின் LJP(RV) கட்சி.
News November 15, 2025
பிஹாரில் 200+ இடங்களில் NDA வெற்றி

பிஹார் தேர்தலில் NDA கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. EC வெளியிட்டுள்ள முடிவுகளின்படி BJP 89, JD(U) 85, LJP (ராம் விலாஸ்) 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. MGB கூட்டணியில் RJD 24, காங்கிரஸ் 6 இடங்களை கைப்பற்றியுள்ளன. ஓவைசியின் AIMIM 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஒரு இடத்தை கூட கைப்பற்றவில்லை.
News November 15, 2025
நோட்டாவுடன் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் கட்சி

முதல் முறையாக தேர்தல் களம் கண்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி(JSP), பிஹாரில் படுதோல்வி அடைந்துள்ளது. 238 தொகுதிகளில் போட்டியிட்ட JSP பெரும்பாலான இடங்களில் டெபாஸிட்டை இழந்துள்ளது. அக்கட்சி மொத்தமாக 3.44% வாக்குகளையே பெற்றுள்ளது. அதோடு 68 தொகுதிகளில் நோட்டாவை விட குறைவான வாக்குகளே JSP-க்கு கிடைத்துள்ளது. அரசியலில் புதிய கட்சிகளுக்கு இடமில்லையா?


