News November 30, 2024
BIG BREAKING: கரையை கடக்கத் தொடங்கியது ஃபெஞ்சல் புயல்

ஃபெஞ்சல் புயல் காரைக்கால்- மகாபலிபுரம் இடையே தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. புயலின் முகப்பு பகுதி இப்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்தப் புயல் முழுவதும் கரையைக் கடக்க சுமார் 4 மணி நேரம் வரை ஆகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. புயல் கரையைக் கடக்கையில் மணிக்கு 80 கி.மீ. முதல் 90 கி.மீ. வரை வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 28, 2025
PM மோடியை விமர்சித்த பாடகி மீது வழக்குப்பதிவு

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் PM மோடியை விமர்சித்த போஜ்புரி பாடகி நேஹா சிங் ரத்தோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘மோடி இப்போது பீகாரில் பஹல்காம் தாக்குதலின் பெயரில் வாக்கு சேகரிப்பார்’ என்று நேஹா கூறியிருந்தார். இந்த வீடியோ பாக். பத்திரிகையாளர்கள் குழு நடத்தும் X ஹேண்டில் வெளியானதை அடுத்து, தேசிய ஒருமைப்பாட்டை குலைப்பதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News April 28, 2025
திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரஸ் திட்டம்?

திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்வபெருந்தகை முன்னிலையில் அண்மையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் பேசிய மாவட்ட தலைவர்கள், திமுகவிடம் 60 தொகுதிகளை கேட்க வேண்டும், துணை முதல்வர் பதவி கேட்க வேண்டும், திமுக தரவில்லையேல் அக்கட்சித் தலைமையிலான கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
News April 28, 2025
10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் ஒருபுறம் வெயில் சுட்டெரிக்க, மறுபுறம் கோடை மழையும் கொட்டி வருகிறது. பிற்பகல் 3 மணி வரை கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதேபோல், காரைக்கால் பகுதியிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியாவில் வெயிலா? மழையா?