News February 25, 2026
BIG BREAKING: தூத்துக்குடி மண்ணின் மைந்தன் காலமானார்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த சுதந்திர போராட்ட வீரரும், கம்யூ;கட்சியின் மூத்த தலைவருமான ஆர். நல்லகண்ணு (101) சென்னையில் காலமானார். பிப்.1ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மூச்சுத்திணறல் & நுரையீரல் தொற்றால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
Similar News
News February 25, 2026
நல்லகண்ணுவிற்கு தூத்துக்குடி எம்.பி, அமைச்சர் இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று பிற்பகல் 1.55 மணியளவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் இவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
News February 25, 2026
நல்லகண்ணு மீசையை துறந்தது ஏன் தெரியுமா?

ஸ்ரீவைகுண்டத்தை சொந்த ஊராக கொண்ட நல்லகண்ணு பொதுவுடைமை கட்சியால் ஈர்க்கப்பட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். 1949-ம் ஆண்டு இவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்பொழுது போலீசார் இவரது மீசையை பொசுக்கியும் முடிகளை சிதைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதிலிருந்து நல்லகண்ணு தனது மீசையை துறந்து மீசை வைப்பதை விட்டு விட்டார் என்கின்றனர் அவரை அறிந்தவர்கள்.
News February 25, 2026
JUST IN சோகத்தில் மூழ்கிய ஸ்ரீவைகுண்டம் பகுதி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் 1925-ம் ஆண்டு ராமசாமி-கருப்பாயி தம்பதியின் மூன்றாவது மகனாக பிறந்தவர் நல்லகண்ணு. ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலை பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த இவர் தமிழக அரசின் தலைசால் தமிழர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.தற்போது இவரது மறைவால் ஸ்ரீவைகுண்டம் பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.


