News September 8, 2025
BIG BREAKING: காஞ்சிபுரம் டி.எஸ்.பி தப்பியோட்டம்!

காஞ்சிபுரம் மாவட்ட உட்கோட்ட துணை கண்காணிப்பாளராக உள்ள சங்கர் கணேஷ் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வந்த புகாரின்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, அவரை கைது செய்ய மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. இவர் சீருடையுடனே நீதிபதி காரில் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் பாதி வழியில் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News September 9, 2025
குடிநீர் ஆலைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு

காஞ்சிபுரம் – காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குடிநீர் ஆலைகளில் விரைவில் ஆய்வுகள் நடைபெற உள்ளன. உணவு பாதுகாப்புத்துறை உத்தரவின் பேரில், குடிநீர் தரம் மற்றும் சுத்தம் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டுள்ளது.
News September 9, 2025
காஞ்சிபுரம்: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல்!

காஞ்சிபுரம் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேங்கங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு 104 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் உங்கள் காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..
News September 9, 2025
காஞ்சிபுரம்: பணக் கஷ்டம் நீங்க…

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கள்வனூர் பகுதியில் கள்வப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாளித்து வரும் கள்வப்பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாருக்கு தயிர்சாத நெய்வேத்தியம் படைத்து விஷேச பூஜைகள் செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என நம்பப்படுகிறது. பணக் கஷ்டத்தில் வாடும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்து உதவுங்க!