News August 16, 2025
பாரதமும் சனாதனமும் ஒன்று: R.N.ரவி

1,000 வருடங்களுக்கு முன்பு நோய் ஏற்படாததற்கு சனாதன தர்மமே காரணம் என்று கவர்னர் R.N.ரவி தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பேசிய அவர், பாரதமும் சனாதனமும் ஒன்று, அதனைப் பிரிக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது என்றார். வேதங்கள் மூலமாகவே இந்த நாடு ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, உதயநிதி, சனாதனத்தை டெங்கு உடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு கவர்னர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
Similar News
News March 3, 2026
மார்ச் 3: வரலாற்றில் இன்று

*உலக வனவிலங்கு நாள் *1938 – சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிப்பு *1940 – வரலாற்றாய்வாளர் கடம்பி மீனாட்சி நினைவு நாள் *1941 – ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பிறந்தநாள் *1944 – பாடகர் ஜெயச்சந்திரன் பிறந்தநாள் *1985 – நடிகை வரலட்சுமி சரத்குமார் பிறந்தநாள் *2011 – விண்வெளி அறிவியலாளர் வெங்கடராமன் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்
News March 3, 2026
கமேனியின் பேத்தியும் உயிரிழப்பு (PHOTO)

இஸ்ரேல், USA நடத்திய தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் கமேனி, அவரது மகள், மருமகன் உள்பட பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், கமேனியின் ஒன்றரை வயது பேத்தி ஜஹ்ரா முகமதியின் போட்டோ SM-ல் வைரலாகி வருகிறது. உலகில் உதிர்ந்த கொஞ்ச நாள்களிலேயே எந்தவித தவறும் செய்யாத அந்த குழந்தை இறந்தது வருத்தமளிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். முன்னதாக, கமேனி தங்கியிருந்த பகுதியில் 30 ஏவுகணைகள் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News March 3, 2026
இனியாவது திருந்துமா திமுக அரசு? நயினார்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி அளிப்பது பற்றி TN அரசு மார்ச் 4.ல் பதிலளிக்க மதுரை HC உத்தரவிட்டுள்ளது. இதை X பதிவில் சுட்டிக்காட்டியுள்ள நயினார், திமுக அரசு தனது தவறை உணர்ந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். இனியும் இந்துக்களின் உரிமையை முடக்க திட்டமிட்டால், கோர்ட் வழங்கும் இறுதிதீர்ப்பின் போது திமுக அரசு முற்றிலும் முடங்கும் என கூறியுள்ளார்.


