News May 26, 2024

போலி வேலை வாய்ப்பு குறித்து எச்சரிக்கை

image

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறுவோரை நம்பி ஏமாறாமல் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து அயலக தமிழர் நலத்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “நேர்காணலுக்கு செல்லும் முன் நிறுவனம் குறித்து விசாரிக்க வேண்டும், விசா எடுப்பதற்கு முன் குறிப்பிட்ட பணி வாய்ப்பு குறித்து துணை தூதரகத்தில் விசாரிக்க வேண்டும்” என்று பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Similar News

News November 24, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் 662 மி.மீ மழை பதிவு

image

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இன்று(நவ.24) காலை 6 மணி நிலவரப்படி தொண்டி 87.4 மிமீ, ஆர் எஸ் மங்கலம் 77.5 கமுதி 66.2 மிமீ, திருவாடானை 58.4 மிமீ, தானம் 54.7 மிமீ, கடலாடி 51 மிமீ, பரமக்குடி 47.4, ராமநாதபுரம் மிமீ மற்றும் இதர பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் 662 மிமீ மழை பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

சற்றுமுன்: விலை புதிய உச்சம் தொட்டது.. மக்கள் அவதி

image

முருங்கைக்காய் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று முருங்கைக்காய் கிலோவுக்கு ₹100 உயர்ந்து ₹400-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் தக்காளி, கத்தரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் கிலோவுக்கு ₹10 முதல் ₹20 வரை உயர்ந்துள்ளது. மழையால் வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விலை உயர்வால், குடும்ப தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News November 24, 2025

தமிழ்நாட்டில் வாக்களிக்க வெளிமாநிலத்தவர் விருப்பம்

image

விநியோகம் செய்யப்பட்ட SIR படிவங்களில், 50%-ஐ பூர்த்தி செய்து பெற்றிருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வசிக்கும் வெளிமாநிலத்தவர் 869 பேர் இங்கு வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வெளிமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் படிவம் 8-ஐ நிரப்பி தமிழகத்தின் வாக்காளர்களாக இணையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!