News March 18, 2024

பெட்டிங் ஆப் மோசடி.. முன்னாள் முதல்வர் மீது வழக்கு

image

ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி குறித்த ED அறிக்கை அடிப்படையில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆப் புரமோட்டர்கள் பாகேலுக்கு ரூ.508 கோடி கொடுத்ததாக முன்பு குற்றஞ்சாட்டிய ED, சமீபத்தில் இது தொடர்பாக அறிக்கை அம்மாநில அரசிடம் அளித்துள்ளது. ஆனால், இது அரசியல் பழிவாங்கலுக்காக பாஜக அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்கு என பாகேல் குற்றம் சாட்டியுள்ளார்.

Similar News

News October 24, 2025

BREAKING: சற்றுநேரத்தில் கூட்டணியை அறிவிக்கிறார்

image

தமிழக முன்னேற்ற கழகம் (TMK) என்ற புதிய கட்சி இன்று உதயமாகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் யாதவ மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் செங்கம் கு.ராஜாராம், தனது ஆதரவாளர்களுடன் TMK கட்சியை சற்றுநேரத்தில் தொடங்குகிறார். கட்சியின் கொடியை அறிமுகம் செய்யும் அவர், 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்தும் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News October 24, 2025

பிஹார்: 10 தொகுதிகளில் மோதும் காங்.,- RJD

image

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. கடைசியில், தேஜஸ்வி யாதவ் CM வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், RJD-க்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் மற்றும் VIP கட்சிகளின் 4 வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்றனர். இதனிடையே, 10 தொகுதிகளில் மனுவை வாபஸ் பெறாததால் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

News October 24, 2025

டெஸ்டில் இருந்து விலகியது ஏன்? ஷ்ரேயஸ் ஐயர் விளக்கம்

image

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியது ஏன் என்பதற்கு இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார். தனக்கு முதுகுப் பிரச்சினை இருப்பதை தெரிவித்த அவர், அதன் காரணமாக தன்னால் தொடர்ந்து 2 நாள்கள் பீல்டிங் செய்ய முடிவதில்லை என கூறினார். இதனாலேயே டெஸ்டில் ஓய்வு எடுத்துள்ளதாக கூறிய அவர், ஆனால் ODI-ல் ஒரு நாள் பீல்டிங் செய்த பிறகு, மீண்டுவர நேரம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

error: Content is protected !!