News March 21, 2024

ஷோபா மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு

image

மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மீது பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புப்படுத்தி அவர் பேசியது சர்ச்சையான நிலையில், திமுக புகாரின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சர்ச்சையாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் ஷோபா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News October 23, 2025

பெட்ரோல் பங்கில் ஏமாறாமல் இருக்க இதெல்லாம் கவனியுங்க

image

இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பல்வேறு மோசடிகள் நடந்துவருவதாக புகார்கள் எழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளின் பணம் பெருமளவில் சுருட்டப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, பெட்ரோல் போடும்போது ஏமாறாமல் இருக்க நீங்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. அவை என்ன என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.

News October 23, 2025

இதை செய்யுங்க… உங்க இதயம் நல்லா இருக்கும்!

image

தொடர்ந்து 40 புஷ்-அப் செய்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் ஆபத்து மிகக் குறைவு என டாக்டர்கள் கூறுகின்றனர். புஷ்-அப் போன்ற ஏரோபிக் உடற்பயிற்சிகளுக்கும் இதய ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டாம். 1,000 ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 40-க்கு மேல் புஷ்-அப்கள் செய்யும் திறன் கொண்டவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் ஆபத்து ஒப்பீட்டளவில் 96% குறைவதாக தெரிய வந்துள்ளது. நீங்களும் ட்ரை பண்ணலாமே?

News October 23, 2025

அந்த வலியை பாக்., எப்போதும் மறக்காது: ராஜ்நாத் சிங்

image

தற்போது போர்கள் பல்வேறு புதிய பரிணாமங்களை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அதனால், பாரம்பரிய பாதுகாப்பு நடைமுறைகள் தற்போது வேலைக்கு ஆகாது எனவும், அதனால் தான் முப்படைகளுக்கும் தலைமை தளபதி உள்ளிட்ட பல்வேறு முன் முயற்சிகளை அரசு எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆபரேஷன் சிந்தூர் ஏற்படுத்திய வலியை பாகிஸ்தான் எப்போதும் மறக்காது என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!