News March 21, 2024
ஷோபா மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு

மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மீது பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புப்படுத்தி அவர் பேசியது சர்ச்சையான நிலையில், திமுக புகாரின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சர்ச்சையாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் ஷோபா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News April 27, 2025
அரசு முடிவு: பெண்களுக்கு சூப்பர் ஹேப்பி நியூஸ்!

2026 தேர்தலில் பெண்கள் வாக்குகளை கவரும் வகையில், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, திமுக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டால், அது ஏழை பெண்களுக்கு பெருத்த உதவியாக இருக்கும். அதனால் வாக்கு வங்கி கணிசமாக உயரும் என அரசு யோசித்து வருகிறது.
News April 27, 2025
சித்திரை அமாவாசை: பித்ரு தோஷம் நீங்க இதை செய்யுங்க..!

இன்று வைசாக அமாவசை எனப்படும் சித்திரை அமாவாசை. பித்ரு தோஷம் நீங்க சில பரிகாரங்களை செய்யலாம். அரச மரத்திற்கு பூக்கள் சமர்பித்து, உங்கள் முன்னோர்களை நினைத்து ‘ஓம் பித்ருப்ய: நமஹ’ என்று சொல்லுங்கள். சூரிய பகவானுக்கு நீர் சமர்பித்து வழிபடலாம். தெற்கு திசை நோக்கி உங்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்யுங்கள். முன்னோர்களின் படத்திற்கு முன் விளக்கு ஏற்றி அவர்களின் ஆசியை வேண்டுங்கள்.
News April 27, 2025
170 சீட் உறுதி.. வியூகம் வகுக்கும் இபிஎஸ்!

2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் இபிஎஸ் தெளிவாக உள்ளார். எனவே, 170-க்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டும் என அவர் நினைக்கிறார். அதனால் தான், ADMK 150, BJP 40, பிற கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதிகள் என்ற பாஜகவின் கணக்கிற்கு அவர் உடன்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த முறை ஆட்சியை பிடிப்பதில் அவர் உறுதியாக உள்ளதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.