News July 9, 2025

அதிகாலையில் எழுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்

image

அதிகாலையில் கண் விழிப்பதும், இரவு சீக்கிரமே படுக்கைக்குச் செல்வதும்தான் சிறந்தது. அதிகாலை எழுவதால் மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். யோகா, உடற்பயிற்சி செய்ய போதுமான நேரம் கிடைக்கும். இதனால் நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ், உடல் பருமன், சர்க்கரைநோய் வருவது குறையும். பின்பு இரவு சரியான நேரத்துக்குத் தூக்கம் வருவதால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராது என்கின்றனர் மருத்துவர்கள்.

Similar News

News July 9, 2025

கட்டுமான நலவாரியத்தின் கல்வி உதவித்தொகை உயர்வு!

image

கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. செவிலியர், கேட்டரிங், உணவு தயாரித்தல், சேவை உள்ளிட்ட பட்டயப் படிப்புகளுக்கு(Diploma) ஆண்டுக்கு ₹3,000 வழங்கப்படும். கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகள் முனைவர் பட்டப்படிப்புக்கு ஆண்டுக்கு ₹15,000 வீதம் 3 ஆண்டுக்கு வழங்கப்படவுள்ளன. இதனால், பல லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் பயனடையும்.

News July 9, 2025

சிறுவர்களுக்கான பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

image

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் PAN கார்டு கட்டாயமாகும். குழந்தைகளின் பெயரில் முதலீடுகள் உள்ளிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு இது பயன்படுகிறது. இதற்கு NSDL வெப்சைட்டில் அப்ளை செய்யும்போது Form 49A-ஐத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்க வேண்டும். உங்களுக்கு பான் கார்டு வரும்போது புகைப்படம், கையெழுத்து இல்லாமலே வரும். எனவே, 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் மீண்டும் விண்ணப்பித்து போட்டோ உடன் கார்டைப் பெறலாம்.

News July 9, 2025

ஓரணியில் திமுகவினரே இல்லை.. உள்கட்சி பூசல்

image

நேற்று நடைபெற்ற புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி, KN நேரு & ரகுபதி ஆகியோரின் போட்டோஸ் இருக்கும்போது அதே பகுதியைச் சேர்ந்த மெய்யநாதன் போட்டோ எங்கே என அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று கூறிவிட்டு, ‘ஓரணியில் திமுகவினரே இல்லை’ என ஒருவர் பேசியதால் பரபரப்பானது. முன்னதாக, நிர்வாகியை நேரு தாக்க பாய்ந்ததும் பேசுபொருளானது.

error: Content is protected !!