News August 24, 2024

UPS ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள்

image

<<13934004>>UPS<<>> ஓய்வூதிய திட்டத்தின் கீழ், கடைசி 12 மாத பேசிக் சம்பளத்தில் 50% பணம் உறுதியாக ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்கு அந்த அரசு ஊழியர் 25 ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும். ஒரு வேளை அவர் உயிரிழந்தால், அவரது குடும்பத்திற்கு 60% பணம் ஓய்வூதியமாக வழங்கப்படும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு உறுதியாக மாதம் ₹10,000 வழங்கப்படும். இதில் மத்திய அரசின் பங்களிப்பு 18%ஆக உயர்த்தப்படும்.

Similar News

News December 3, 2025

இந்தியாவில் 811 பேருக்கு ஒரு டாக்டர் மட்டுமே

image

இந்தியாவில் 811 பேருக்கு ஒரு டாக்டர் மட்டுமே இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை சமாளிக்க மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிப்பது, சுகாதார திட்டங்களை செயல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 2014-ல் 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 818 ஆகவும், UG இடங்கள் 1,28,875 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 3, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை
▶குறள் எண்: 538
▶குறள்:
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
▶பொருள்: உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.

News December 3, 2025

இந்துமத வெறுப்பால் திமுக அரசு அழியும்: நயினார்

image

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது என முறையிட்டு தனது இந்து மதவெறுப்பை திமுக அரசு மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியுள்ளதாக நயினார் சாடியுள்ளார். மதச்சார்பின்மை வேடமிட்டு இந்து மதத்தை குறிவைத்துத் தாக்கும் திமுக அரசின் மேல்முறையீட்டு முறியடிக்கப்படும் என்றும், அவர் கூறியுள்ளார். மக்களின் மதநம்பிக்கையை புண்படுத்தும் திமுக அரசு தூக்கியெறிப்படும் எனவும் அவர் X-ல் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!