News August 24, 2024
UPS ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள்

<<13934004>>UPS<<>> ஓய்வூதிய திட்டத்தின் கீழ், கடைசி 12 மாத பேசிக் சம்பளத்தில் 50% பணம் உறுதியாக ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்கு அந்த அரசு ஊழியர் 25 ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும். ஒரு வேளை அவர் உயிரிழந்தால், அவரது குடும்பத்திற்கு 60% பணம் ஓய்வூதியமாக வழங்கப்படும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு உறுதியாக மாதம் ₹10,000 வழங்கப்படும். இதில் மத்திய அரசின் பங்களிப்பு 18%ஆக உயர்த்தப்படும்.
Similar News
News December 24, 2025
ஹைடெக் வசதியுடன் அரசு வால்வோ பஸ் சேவை

சென்னையில் ₹34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன வால்வோ AC பஸ்களின் சேவையை CM ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பஸ்ஸில் ஏறி அதிலுள்ள வசதிகளை நேரடியாக ஆய்வு செய்தார். மொத்தம் 51 பேர் பயணிக்க கூடிய இந்த பஸ்ஸில் டிவி, செல்போன் சார்ஜ், ரீடிங் லைட், அதிக லெக் ஸ்பேஸ் வசதிகள் உள்ளன. மணிக்கு 120 கிமீ வேகத்தில் ஓடும் இந்த பஸ்ஸில் 12 தானியங்கி கியர்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது கூடுதல் சிறப்பு.
News December 24, 2025
இவர் இன்னொரு ‘துரந்தர்’

துரந்தர் வெற்றியால் இந்திய உளவாளிகள் பற்றிய வரலாற்றை பலரும் அலசுகின்றனர். அதில் ரவீந்தர கெளஷிக் முக்கியமானவர். நடிப்பில் தேர்ந்த இவரை RAW அமைப்பு பயிற்சியளித்து PAK-க்கு அனுப்பியது. பாக்., ஆர்மியில் சேர்ந்த இவர் 1980-ல் முக்கிய தகவலளித்து 20,000 IND வீரர்களை காப்பாற்ற உதவினார். இறுதியாக சிக்கியதில், 16 வருட சிறைவாசம் அனுபவித்து இறந்தார். Black Tiger என கெளரவிக்கப்பட்ட ரவீந்தருக்கு ராயல் சல்யூட்!
News December 24, 2025
இளைஞர்களின் ஆற்றலில் இஸ்ரோவின் எழுச்சி: PM

இந்திய இளைஞர்களின் ஆற்றலால், நமது விண்வெளி திட்டங்கள் மிக வலிமையாக மாறியுள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். <<18656125>>புளூபேர்ட்<<>> செயற்கைக்கோளை ஏவிய LVM3 ராக்கெட்டின் நம்பகமான செயல்பாடுகள், ககன்யான் போன்ற எதிர்கால திட்டங்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதாக அவர் குறிப்பிட்டார். வணிக ரீதியிலான விண்வெளி சேவைகளை விரிவுபடுத்தவும், சர்வதேச கூட்டணிகளை வலுப்படுத்தவும் இது உதவுவதாக அவர் கூறியுள்ளார்.


