News August 7, 2024
10 மணிக்குள் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்

இரவு 10 -11 மணிக்குள் தூங்குவதால் இதயம் மற்றும் அது சார்ந்த நோய் அபாயங்கள் குறைவதாக ஐரோப்பிய ஹார்ட் ஜர்னல் நடத்திய ஆய்வு கூறுகிறது. தினமும் 8-9 மணி நேரம் உறக்கம் பெற வாய்ப்புள்ளதால், உடல் முழுமையாக ஓய்வெடுக்க வழிவகுக்கிறது. ஹார்மோன்களில் சமநிலை ஏற்படுவதால், வேலையில் செயல்திறன் அதிகரிக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் நல்ல வலுப்பெறுவதால், உடல் முழுமையான ஆரோக்யம் பெறுகிறது.
Similar News
News December 25, 2025
BREAKING: நாளை முதல்.. அரசு வெளியிட்டது

ரயில் கட்டண உயர்வு நாளை(டிச.26) முதல் அமலுக்கு வரவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி சாதாரண வகுப்புகளில் 215 km வரை விலை மாற்றமில்லை. 215 கிமீக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 1 பைசா அதிகரிக்கும். மேலும், மெயில்& AC இல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 2 பைசா அதிகரிக்க உள்ளது. 500 கிலோ மீட்டர்களுக்கு AC இல்லாத வகுப்புகளில் தற்போது உள்ள விலையை விட ₹10 அதிகமாகும்.
News December 25, 2025
அழகே பொறாமைப்படும் ஹிமாலயன் மோனல் PHOTOS

மயில் வண்ணங்களை கொண்ட இந்த பறவையின் பெயர் ஹிமாலயன் மோனல். இமயமலையில் காணப்படும் மோனல், நேபாளத்தின் தேசிய பறவையாக அறியப்படுகிறது. மின்னும் இறகுகளுடன் பிரகாசமாக ஜொலிக்கும் பறவையின் கிரீடம், அதன் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. பனிப்பாறைகளில் துள்ளி குதித்து விளையாடும் மோனலின் அழகை ரசிக்க, மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்யுங்கள். பிடிச்சிருந்தா Like & SHARE
News December 25, 2025
பயங்கர ஏவுகணையை பரிசோதித்த இந்தியா

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் K-4 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணுசக்தியால் இயங்கும் ஐஎன்எஸ் அரிகாட் நீர்மூழ்கி கப்பலில் இருந்து, 3,500 கி.மீ., தூரம் பயணித்து தாக்கும் இந்த பாலிஸ்டிக் ஏவுகணை (SLBM) சோதனை செய்யப்பட்டுள்ளது. US, சீனா, ரஷ்யா 5,000 கி.மீ., தூரம் சென்று தாக்கும் SLBM-ஐ கொண்டுள்ள நிலையில், இந்தியா அதை நெருங்கி வருகிறது.


