News August 7, 2024
10 மணிக்குள் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்

இரவு 10 -11 மணிக்குள் தூங்குவதால் இதயம் மற்றும் அது சார்ந்த நோய் அபாயங்கள் குறைவதாக ஐரோப்பிய ஹார்ட் ஜர்னல் நடத்திய ஆய்வு கூறுகிறது. தினமும் 8-9 மணி நேரம் உறக்கம் பெற வாய்ப்புள்ளதால், உடல் முழுமையாக ஓய்வெடுக்க வழிவகுக்கிறது. ஹார்மோன்களில் சமநிலை ஏற்படுவதால், வேலையில் செயல்திறன் அதிகரிக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் நல்ல வலுப்பெறுவதால், உடல் முழுமையான ஆரோக்யம் பெறுகிறது.
Similar News
News January 3, 2026
எதில் அதிக நேரம் செலவாகிறது?

OTT, Reels உள்ளிட்டவைகளில் நேரம் செலவிடுவது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக, இந்தியாவின் திரை பயன்பாட்டு நுகர்வு முறைகளை பற்றி தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில், 2025-ல் பார்வையாளர்கள் எதில் தங்களது நேரத்தை செலவிடுகின்றனர் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்கள் எதில் நேரத்தை செலவிடுகிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.
News January 3, 2026
கோயிலில் மதவெறியை வளர்க்கக் கூடாது: சேகர்பாபு

கன்னியாகுமரி கோயில் நிகழ்ச்சியில் அமைச்சர் <<18742042>>சேகர்பாபு<<>> பக்தர்களை திட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், அமைதி காக்கும் இடத்தில் மனிதநேயத்தை வளர்க்க வேண்டும், மதவெறியை வளர்க்கக் கூடாது என சேகர்பாபு தெரிவித்துள்ளார். பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்தை கோயிலுக்கு வெளியே சொல்லட்டும் எனவும், ஆன்மிகமும், பக்தியும் அறத்தைதான் உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 3, 2026
‘அரசன்’ படத்தில் 3 கெட்டப்களில் நடிக்கும் சிம்பு!

அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 11 நாள்களாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு, சென்னையில் வரும் 20-ம் தேதி தொடங்க உள்ளதாகவும், 1980, 1992, 1995 காலகட்டங்களில் கதை நிகழ்வதால், சிம்பு 3 கெட்டப்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மதுரையைச் சேர்ந்த கபடி வீரர் ஒருவர், சென்னையில் கேங்ஸ்டராக மாறுவதை சுற்றி கதை நகர்வதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


