News August 7, 2024
10 மணிக்குள் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்

இரவு 10 -11 மணிக்குள் தூங்குவதால் இதயம் மற்றும் அது சார்ந்த நோய் அபாயங்கள் குறைவதாக ஐரோப்பிய ஹார்ட் ஜர்னல் நடத்திய ஆய்வு கூறுகிறது. தினமும் 8-9 மணி நேரம் உறக்கம் பெற வாய்ப்புள்ளதால், உடல் முழுமையாக ஓய்வெடுக்க வழிவகுக்கிறது. ஹார்மோன்களில் சமநிலை ஏற்படுவதால், வேலையில் செயல்திறன் அதிகரிக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் நல்ல வலுப்பெறுவதால், உடல் முழுமையான ஆரோக்யம் பெறுகிறது.
Similar News
News December 22, 2025
பெர்னாட் ஷா பொன்மொழிகள்

*நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெருஞ்சுமை ஆகிவிடும்.
*உயிருள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன். உழைக்க உழைக்க எனக்கு உயிர் வாழும் விருப்பம் அதிகமாகிறது.
*பணம் பசியைத்தான் போக்கும். துன்ப உணர்ச்சியை போக்காது.
*எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எங்கே செய்ய வேண்டும் என அறிந்திருப்பவரே நல்ல தலைவர்.
News December 22, 2025
பள்ளிகளில் வகுப்புவாதம் கூடாது: கேரள அரசு

கேரளாவின் சில தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸை கொண்டாட பல கட்டுப்பாடுகளை விதித்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், பள்ளிகளை எப்போதும் வகுப்புவாத ஆய்வகங்களாக மாற்ற அனுமதிக்கப்பட மாட்டாது என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஓணம், கிறிஸ்துமஸ், ரம்ஜான் ஆகிய பண்டிகைகளை அனைத்து பள்ளி மாணவர்களும் கொண்டாடுவதால், அது அவர்களுக்கு அன்பை கற்றுக்கொள்ள உதவுகிறது என்றார்.
News December 22, 2025
U 19: விழா மேடை ஏறாத இந்திய அணியினர்

ஆடவர் <<18075095>>ஆசிய கோப்பையை<<>> அடுத்து, U-19 ஆசிய கோப்பையிலும், இந்தியா – பாக்., இடையேயான மோதல் நீடித்துள்ளது. டிராஃபியை வெற்றி பெற்ற பாக்., அணிக்கு, அந்நாட்டைச் சேர்ந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்ஷின் நக்வி வழங்கியது மட்டுமல்லாமல், வீரர்களுடன் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டார். ஆனால், மேடை கூட ஏறாத இந்திய அணியினர், ICC இணை உறுப்பினர் முபாஷிர் உஸ்மானியிடம் இருந்தே மெடல்களை பெற்றனர்.


