News October 27, 2025
கந்த சஷ்டி படிப்பதால் கிடைக்கும் பலன்கள்

மனமுருகி கந்த சஷ்டி கவசத்தை படிப்பதால், நவகிரகங்களும் நம்முடனே இருக்கும் என்பது ஐதீகம். வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள் நீங்கி, நேர்மறை சக்திகள் உண்டாகும். மன, உடல் வலிமை அதிகரிப்பதோடு, முக வசீகரமும் ஏற்படும். முருகனுக்கே உகந்த செவ்வாய்க்கிழமைகளில் 3 முறை கந்த சஷ்டி கவசத்தை படிப்பதால், நாம் நினைத்த காரியங்கள் கைகூடும். அரஹரா போற்றி! அடியார்க்கு எளியாய் போற்றி! சண்முகா போற்றி! சரவணபவனே போற்றி!
Similar News
News October 27, 2025
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியா அருகே திமோர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள், அலறியடித்துக்கொண்டு சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால், ஏற்பட்ட பாதிப்பு, உயிர்சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
News October 27, 2025
DMK Vs BJP.. மாறிமாறி விமர்சனம்

அதிமுகவின் உரிமைகளை பாஜகவிடம் EPS அடகு வைத்துவிட்டதால், மக்களின் உரிமைகளை காக்க வேண்டியவர்கள் திமுகவினரும் தோழமைக் கட்சியினரும்தான் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி, மாநிலத்தின் உரிமைகளை, வளங்களை லஞ்சம் மற்றும் ஊழலிடம் திமுக விற்று விட்டதால், ஒட்டு மொத்த மாநிலத்தின் நலன்களை பேணி காக்க வேண்டியவர்கள் பாஜக, தோழமை கட்சியினர் தான் என பதிலடி கொடுத்துள்ளார்.
News October 27, 2025
கர்நாடகாவில் இனி 30 மார்க் எடுத்தால் பாஸ்

கர்நாடகாவில் SSLC, PUC-க்கான தேர்ச்சி சதவீதத்தை 35%-லிருந்து 33% ஆக குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, SSLC-ல் 206/625 மதிப்பெண்களும், PUC-ல் 198/600 மதிப்பெண்களும் (ஒரு பாடத்தில் 30 மார்க் எடுக்க வேண்டும்) எடுத்தால் பாஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழகத்தில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்கலாமா? அவ்வாறு குறைத்தால் எவ்வளவு குறைக்கலாம் என்று கமெண்ட் பண்ணுங்க.


