News August 18, 2024
வாசிப்பு பழக்கத்தால் கிடைக்கும் நன்மைகள்

நாவல், கதை வாசிக்கும் போது அதில் இடம்பெறும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் புதிய உலகத்திற்கு நம்மை அழைத்து செல்கின்றன. இதனால் கற்பனை திறன் அதிகரிப்பதோடு படைப்பாற்றல் மேம்படுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலைத் தீர்ப்பதற்கு மனது பக்குவப்படுகிறது. பல்வேறு துறை அறிவை புத்தக வாசிப்பு அளிக்கிறது. கவனச் சிதறலை தடுத்து கவனத்தை குவிக்கும் திறன் மேம்படுகிறது. மன அழுத்தத்தை போக்கவும் வழிவகுக்கிறது.
Similar News
News October 19, 2025
IND Vs ENG: அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணி, இன்றைய போட்டியில் வென்றால், அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாக அமையும். ஒருவேளை தோற்றால், நியூசிலாந்து உடனான அடுத்த போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய சூழல் ஏற்படும். அதேபோல், இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வென்றால், அரையிறுதிக்கு தகுதி பெறும்.
News October 19, 2025
அக்டோபர் 19: வரலாற்றில் இன்று

* 1888 – நாமக்கல் கவிஞர் பிறந்தநாள். *1910 – நோபல் பரிசு பெற்ற தமிழர் சுப்ரமணியன் சந்திரசேகர் பிறந்தநாள். *1943 – காச நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது *1953 – நடிகர் மதன் பாப் பிறந்தநாள். *1956 – நடிகர், பேச்சாளர் ஞானசம்பந்தன் பிறந்தநாள். *1976 – சிம்பன்சி உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது. *2006 – நடிகை ஸ்ரீவித்யா இறந்தநாள். *2023 – ஆன்மிக குரு பங்காரு அடிகளார் இறந்தநாள்.
News October 19, 2025
National Roundup: பிஹாரில் தனித்து போட்டியிடும் JMM

*பிஹார் தேர்தலில் 5 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்., வெளியிட்டது. *டெல்லியில் 28 JNU பல்கலை., மாணவர்கள் கைது. *நிதி ரீதியாக தன்னிறைவு பெற்ற பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு. *ஹேமந்த் சோரனின் JMM கட்சி, பிஹாரில் தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு. *ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டை நாட உள்ளதாக உமர் அப்துல்லா அறிவிப்பு.