News August 18, 2024
வாசிப்பு பழக்கத்தால் கிடைக்கும் நன்மைகள்

நாவல், கதை வாசிக்கும் போது அதில் இடம்பெறும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் புதிய உலகத்திற்கு நம்மை அழைத்து செல்கின்றன. இதனால் கற்பனை திறன் அதிகரிப்பதோடு படைப்பாற்றல் மேம்படுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலைத் தீர்ப்பதற்கு மனது பக்குவப்படுகிறது. பல்வேறு துறை அறிவை புத்தக வாசிப்பு அளிக்கிறது. கவனச் சிதறலை தடுத்து கவனத்தை குவிக்கும் திறன் மேம்படுகிறது. மன அழுத்தத்தை போக்கவும் வழிவகுக்கிறது.
Similar News
News November 7, 2025
சர்வர் கோளாறால் டெல்லியில் விமான சேவை பாதிப்பு!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் (ATC) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன. கோளாறை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களை தொடர்புகொண்டு நிலவரங்களை தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 7, 2025
Manchester-ஐ Monster-ஆக மாற்றிய திமுக: நயினார்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை என்று நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். கோவை <<18222861>>பெண் கடத்தல்<<>> சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தின் Manchester-ஐ, Monster-கள் உலா வரும் பகுதியாக மாற்றியதே திமுகவின் சாதனை என விமர்சித்துள்ளார். TN காவல்துறை, திமுகவின் ஏவல்துறையாக செயல்படக் கூடாது எனவும், இளம்பெண்ணை மீட்க உடனடி நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News November 7, 2025
முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராகும் மஸ்க்!

எலான் மஸ்க்குக்கு 1 ட்ரில்லியன் டாலரை (₹88 லட்சம் கோடி) ஊதியமாக வழங்க டெஸ்லாவின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதை பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் டெஸ்லா பங்குகளாக அவர் பெறுவார். இதன் மூலம், அவர் உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராக வாய்ப்புள்ளது. டெஸ்லா சந்தை மதிப்பில் $8.5 டிரில்லியனை அடைய வேண்டும் என இவருக்கு டார்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


