News April 29, 2025
காலையில் தியானம் செய்தால் கிடைக்கும் நன்மைகள்..!

காலையில் விழிப்பதே நிறைய பேருக்கு பிரச்னை. அப்படி விழித்து தியானம் செய்தால் பல நன்மைகள் கிடைக்குமாம். மன அழுத்தத்தை குறைத்து பதட்டத்தை கட்டுப்படுத்த தியானம் உதவுகிறது. விழிப்புணர்வு திறனை மேம்படுத்தி, கவனத்தை அதிகப்படுத்துகிறது. நினைவக இழப்பின் அபாயத்தை தியானம் குறைக்கிறது. நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். SHARE IT
Similar News
News November 22, 2025
கிரிக்கெட் லெஜண்ட் பிரகாஷ் பண்டாரி காலமானார்

கிரிக்கெட், கோல்ப் உள்ளிட்ட போட்டிகளில் கலக்கிய லெஜெண்ட் பிரகாஷ் பண்டாரி(90) காலமானார். டெல்லியில் இருந்து டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராவார். 1955-ல் கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்று அசத்தியவர். பல இளம் வீரர்களை உருவாக்கியுள்ளார். அவரது சாதனையை போற்றும் வகையில் இன்று டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளது. #RIP
News November 22, 2025
தவெகவில் Cold War நடக்கிறதா?

தவெகவில் கோஷ்டி அரசியல் கொடிகட்டி பறப்பதாக பேசப்படுகிறது. ஆரம்பத்தில் விஜய்க்கு அனைத்துமாய் இருந்த புஸ்ஸி ஆனந்தின் நிலை தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறதாம். காரணம், ஆதவ், நிர்மல் குமார் இருவரும் ஆளுக்கு ஒரு அரசியல் செய்கிறார்களாம். இதனால், ஆனந்த் மீதான லைம் லைட் குறைந்து வருவதாக பார்க்கப்படுகிறது. எனவே, அதிகாரத்தை தக்கவைக்க கட்சிக்குள் Cold War நடப்பதாக தவெகவினர் கூறுகின்றனர்.
News November 22, 2025
USA-ன் திட்டம் அமைதிக்கான அஸ்திவாரம்: புடின்

அமெரிக்காவின் <<18355051>>போர் நிறுத்த திட்டம்<<>>, உக்ரைனில் அமைதிக்கான அஸ்திவாரமாக இருக்கும் என புடின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்கா தங்களுடன் ஆலோசிக்கவில்லை என்றாலும், 28 நிபந்தனைகள் அடங்கிய ஆவணத்தை அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த அமைதி திட்டத்தை உக்ரைன், ஐரோப்பிய நாடுகள் ஏற்க மறுத்தால், ரஷ்ய படைகள் முன்னேறுவதை யாரும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.


