News April 29, 2025
காலையில் தியானம் செய்தால் கிடைக்கும் நன்மைகள்..!

காலையில் விழிப்பதே நிறைய பேருக்கு பிரச்னை. அப்படி விழித்து தியானம் செய்தால் பல நன்மைகள் கிடைக்குமாம். மன அழுத்தத்தை குறைத்து பதட்டத்தை கட்டுப்படுத்த தியானம் உதவுகிறது. விழிப்புணர்வு திறனை மேம்படுத்தி, கவனத்தை அதிகப்படுத்துகிறது. நினைவக இழப்பின் அபாயத்தை தியானம் குறைக்கிறது. நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். SHARE IT
Similar News
News December 1, 2025
காங்., மாநில பொதுச் செயலர் கைது

பணமோசடி வழக்கில் காங்., கட்சியின் மாநில பொதுச் செயலர் தளபதி பாஸ்கரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவலிங்கா சிட் ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த அவர், பலரிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சென்னையில் ஹோட்டலில் தலைமறைவாக இருந்த அவரை, முற்றுகையிட்டு பணம் முதலீடு செய்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாஸ்கரை கைது செய்தனர்.
News December 1, 2025
சற்றுமுன்: விலை மொத்தம் ₹13,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹4 உயர்ந்து ₹196-க்கும், கிலோவுக்கு ₹4,000 உயர்ந்து ₹1,96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நவ.29-ம் தேதி (சனிக்கிழமை) வெள்ளி விலை ₹9000, டிசம்பர் மாதத்தில் முதல் நாளான இன்று ₹4000 என 2 நாள்களில் மொத்தம் ₹13,000 அதிகரித்துள்ளது.
News December 1, 2025
நெல்கொள்முதல் விவகாரம்: திமுக நோட்டீஸ்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்நிலையில், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத உயர்வு, 100 நாள் வேலை திட்ட நிதி விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க, திமுக எம்.பி., டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளார். மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெறும் SIR குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.


