News April 11, 2024
பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

பதனியை நன்கு காய்ச்சி பனங்கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. பனங்கற்கண்டு இருமல், மார்புச்சளி தொண்டை கரகரப்பு போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்தது. பனங்கற்கண்டை வாயில் போட்டு, அதை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து அந்த உமிழ் நீரை விழுங்கி வந்தால், வாய்ப்புண், தொண்டை வலி, வாய் துர்நாற்றம் போன்றவை முற்றிலுமாக நீங்கும். கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் புண்களை இவை சரி செய்ய உதவுகிறது.
Similar News
News August 12, 2025
தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் தொடர்ந்து சரிந்துக்கொண்டே செல்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலரின் தேவை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ₹87.66-ஆக உள்ளது. டாலர் மதிப்பு உயர்வதால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும்; சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள், உரங்கள், எரிவாயு ஆகியவற்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
News August 12, 2025
OPSஐ விமர்சிக்க கூடாது: பாஜக உத்தரவு

OPS-ஐ விமர்சிக்க கூடாது என நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. NDA-வில் தொடர்ச்சியாக OPS ஓரங்கட்டப்பட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அவர் அறிவித்தார். இதனையடுத்து அவரை கூட்டணியில் இணைக்க பாஜக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. தமிழகம் வரும் PM மோடியுடன், அவரை சந்திக்க வைக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜக பக்கம் மீண்டும் செல்வாரா OPS ?
News August 12, 2025
‘மாரீசன்’ படத்துக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு

‘மாரீசன்’ படத்துக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இப்படம் திருடனுக்கும், மறதி நோயாளிக்கும் இடையேயான பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த ஷங்கர், வடிவேலு திரையில் தோன்றிய விதம், படத்திற்கு ஆழத்தையும், பலத்தையும் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஃபகத் மீண்டும் ஒரு பாராட்டுக்குரிய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.