News September 28, 2025
பச்சிமோத்தாசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்!

பச்சிமோத்தாசனம் செய்வதால் உடலில் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். படபடப்பு, டென்சன் நீங்கி மன அமைதி உண்டாகும். இதனை செய்ய முதலில், கால்களை நேராக நீட்டி உட்காரவும். அடுத்து முன்னோக்கி குனியுங்கள். இரு கால் கட்டை விரல்களையும் கொக்கி போல் பிடித்துக்கொண்டு, நெற்றியால் கால் முட்டிகளை தொட வேண்டும். இதே நிலையில் இருந்துகொண்டு 1-10 வரை எண்ணவும். பின்னர் ரிலாக்ஸ் செய்யவும்.
Similar News
News September 28, 2025
மூலிகை: கொடுக்காய்ப்புளியின் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, *கொடுக்காய்ப்புளியை தினமும் சாப்பிட்டு வந்தால், வாத நோய் ஏற்படாது *ஜீரண சக்தியை அதிகரிக்கும் *கொடுக்காய்ப்புளியின் பூ, பல்வலி, ஈறு பிரச்னைக்கு தீர்வளிக்கும் *தோல் அழற்சி, வீக்கம், அரிப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது *வயிற்றின் அமிலத்தன்மையை குறைக்க உதவும் *கொடுக்காய்ப்புளியின் கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். SHARE.
News September 28, 2025
காவல்துறையினர் சரியான பாதுகாப்பு அளிக்கவில்லை: EPS

தவெக பரப்புரையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்கு, காவல்துறை முறையாக பாதுகாப்பு அளிக்காததே காரணம் என EPS குற்றம்சாட்டியுள்ளார். ஆளும் கட்சிகளின் கூட்டங்களுக்கு மட்டுமே முறையான போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார். விஜய் நடத்திய மற்ற கூட்டங்களை பார்த்து அதற்கு ஏற்றார் போல, போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால், துயரத்தை தடுத்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News September 28, 2025
பெற்றோர்கள் கொஞ்சம் சிந்தித்திருந்தால்..

உலகம் அறியாத குழந்தைகளை கூட்டத்திற்கு அழைத்து சென்று, பறிகொடுத்து கதறி அழும் பெற்றோர்கள் ஒரு கணம் யோசித்திருந்தால், பெரும் துயரம் தவிர்க்கப்பட்டிருக்குமே. குழந்தைகளை அழைத்துவர வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டும், அதை பொருட்படுத்தவில்லை. ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையையும் தூக்கி சென்றுள்ளனர். கதறி அழும் நேரத்தில் இன்று மற்றவர்கள் ஆறுதல் கூறினாலும், வலி பெற்றோர்களுடையது தானே!
<<-se>>#karurstampede<<>>