News April 13, 2025

மழையால் டாஸ்மாக்கில் சரிந்த பீர் விற்பனை

image

டாஸ்மாக்கில் ஏப்.1 முதல் 7-ம் தேதி வரையிலான பீர் விற்பனை புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 95.64 லட்சம் பீர் விற்பனையாகி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 2024ல் இதேகாலத்தில் 1.30 கோடி பீர்கள் விற்பனையாகி இருந்தன. அந்த விற்பனை தற்போது சரிந்துள்ளது. சில மாவட்டங்களில் மழை பெய்ததே விற்பனை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. எனவே விற்பனையை அதிகரிக்க 5 புதிய பீர்களை டாஸ்மாக் அறிமுகப்படுத்தவுள்ளது.

Similar News

News January 22, 2026

சட்டமன்றத்தை விட்டு வெளியேறியது ஏன்? EPS விளக்கம்

image

பூஜ்ஜிய நேரத்தில் விவசாயிகள் பிரச்னை குறித்து பேச அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்ததாக EPS தெரிவித்துள்ளார். மேலும் கறிக்கோழி வளர்ப்பு பண்ணை தொழிலில் மூலப்பொருள்கள் விலை உயர்வால் வளர்ப்பு கூலியை ₹6.50-லிருந்து ₹20-ஆக உயர்த்த கோரியும் அரசு ஏற்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தாமல் கறிக்கோழி நிறுவனங்களுக்கு சாதகமாக திமுக அரசு செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.

News January 22, 2026

ஜெ., போல விஜய்யும் ஜெயிப்பார்: செங்கோட்டையன்

image

திமுகவும் அதிமுகவும் தேர்தல் களத்தில் பம்பரமாக சுழன்று வருகின்றன. ஆனால், தவெகவோ செயல்படாமல் முடங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், 2011 தேர்தலின்போது மூன்றே இடங்களில் மட்டும் பொதுக்கூட்டம் நடத்தி வெற்றி பெற்ற ஜெ.,வை போல விஜய்யும் வெற்றி பெறுவார் என செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். TTV – OPS ஆதரவாளர்கள் விரைவில் தவெகவில் இணைவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

News January 22, 2026

ADMK போல இரவோடு இரவாக கைது செய்யவில்லை: CM

image

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுடன் TN அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சட்டமன்றத்தில் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக ஆட்சி போல அரசு ஊழியர்களை இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைக்கவில்லை எனவும் பதிலளித்துள்ளார். ஊழியர்களின் போராட்டத்தை வேடிக்கை பார்க்க மாட்டோம் எனவும் அரசு ஊழியர்களின் ஊதியம் குறித்து கொச்சைப்படுத்தும் அளவுக்கு EPS பேசியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

error: Content is protected !!