News October 26, 2025
நாளை மிக கவனம்

புயல் எச்சரிக்கையால் TN-ல் கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. நாளை(அக்.26) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாளை மறுநாள் சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. BE CAREFUL
Similar News
News January 14, 2026
இன்று ₹2,000, ₹5,000 ₹10,000

பொங்கல் பண்டிகை எதிரொலியால் தமிழகம் முழுவதும் பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. முக்கிய மலர் சந்தைகளில் அதிகபட்சமாக மல்லிகைப்பூ ஒரு கிலோ ₹5,000, ₹10,000 முதல் ₹12,000 வரை விற்பனையாகிறது. அதேபோல கிலோ பிச்சிப் பூ ₹1,200, முல்லை ₹2,000 வரை விற்பனையாகிறது. கடும் பனிப்பொழிவு, மழையின் தாக்கம் காரணமாக ஏற்பட்ட வரத்து குறைவினால் மல்லிகைப்பூ விலை அதிகரித்துள்ளதாக பூ வியாபாரிகள் கூறுகின்றனர்.
News January 14, 2026
கரும்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா?

கரும்பு சாப்பிட்டு முடித்து 15 நிமிடத்திற்கு பிறகே தண்ணீர் அருந்த வேண்டும். கரும்பில் உள்ள கால்சியம் சத்து, எச்சிலுடன் கலந்து வேதிவினை ஆற்றுகிறது. அந்த நேரத்தில் தண்ணீர் குடிக்கும்போது, அதிகமான சூட்டை கிளப்பும் எதிர்வினை நடக்கும். இதனால் நாக்கு வெந்து விடும். இதனை தவிர்க்க கொஞ்சம் இடைவெளி விட்டு தண்ணீர் அருந்த வேண்டும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்கள்.
News January 14, 2026
பெண்ணுக்கு இரண்டு பிறப்புறுப்புகள்… துயரம்!

இரண்டு பிறப்புறுப்புகள், இரண்டு கருப்பைகளுடன் இருந்த உ.பி.,யை சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஆபரேஷன் மூலம் லக்னோ டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். பிறந்தது முதலே அப்பெண்ணுக்கு சிறுநீர் கழிப்பதிலும், குடல் இயக்கத்திலும் பெரும் பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், 3 ஆபரேஷன்கள் செய்து அதை டாக்டர்கள் சரி செய்துள்ளனர். இதையடுத்து, வாழ்க்கையிலேயே முதல் முறையாக அப்பெண் மருத்துவ உதவியின்றி வாழத் தொடங்கியுள்ளார்.


