News October 17, 2025

நாளை மிக கவனம்

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்திற்கு 6 நாள்கள் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகையால், வெளியே செல்பவர்கள் குடையை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். கவனமாக இருங்கள் நண்பர்களே..!

Similar News

News October 18, 2025

CSK-வில் சஞ்சு சாம்ஸன்? புன்னகைத்த ருதுராஜ்

image

IPL-ல் சஞ்சு சாம்ஸனை டிரேடிங் மூலம் ராஜஸ்தானிடம் இருந்து சென்னை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சஞ்சு சாம்ஸனுடன், ருதுராஜ் சிரித்து மகிழும் போட்டோவுக்கு ❤️ போட்டு SM-ல் பகிர்ந்துள்ளது CSK. இது, சஞ்சு சாம்ஸன் CSK அணிக்கு வருவதற்கான சமிக்ஞை என கூறும் ரசிகர்கள், Welcome சேட்டா என்று கமெண்ட் செய்கின்றனர். முன்னதாக சஞ்சு சாம்ஸனும், அந்த போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.

News October 18, 2025

பிரின்சிபால் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பிய மாணவர்கள்

image

அந்த காலத்து 90ஸ் கிட்ஸ் தேர்வு எழுத பயந்துவிட்டு வயிறு வலி, காய்ச்சல் அடிப்பதாக கதைவிடுவார்கள். ஆனால், இன்றைய 2K கிட்ஸ் தேர்வை நிறுத்த பிரின்சிபால் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் அளவிற்கு துணிந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் நடந்த இச்சம்பவத்தில், போலியான கல்லூரி அறிக்கையை தயாரித்த மாணவர்கள் அதை SM-ல் பரப்பியுள்ளனர். இதுதொடர்பாக 2 மாணவர்களிடம் போலீஸ் விசாரணை நடத்துகிறது.

News October 18, 2025

அமைச்சர் குடுகுடுப்பைக்காரன் போல் பேசக்கூடாது: அன்புமணி

image

TRB ராஜா அமைச்சரை போல பேச வேண்டும், மாறாக குடுகுடுப்பைக்காரரை போல பேசக்கூடாது என அன்புமணி விமர்சித்துள்ளார். ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்ததுபோல், முதலீடுகள் கண்டிப்பாக வரும் என மீண்டும் மீண்டும் சொல்லும் ராஜா, அது எப்போது வருமென சொல்லவில்லை எனவும் சாடியுள்ளார். மேலும் மக்களை ஏமாற்ற பொய்களை முதலீடு செய்யாமல், உண்மையாகவே முதலீடுகளை ஈர்க்க திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

error: Content is protected !!