News October 1, 2025
நாளை மிக கவனம்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக, சென்னை, நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனிடையே, நாளை தமிழகத்தில் கனமழைக்கான <<17884649>>மஞ்சள் அலர்ட்<<>> கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், காலையில் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்பவர்கள் கவனமாய் இருங்கள் நண்பர்களே!
Similar News
News October 2, 2025
பிரபல நடிகருக்கு விரைவில் திருமணம்

அல்லு அர்ஜுனின் தம்பியும், நடிகருமான அல்லு சிரிஷுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக X-ல் பதிவிட்டுள்ள அவர், அக்.31-ம் தேதி நயனிகா என்பருடன் நிச்சயதார்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். வருங்கால துணையுடன் கைதோர்த்தபடி, அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன. சங்கராந்திக்கு முன்பாக திருமணம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
News October 2, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News October 2, 2025
ஒரே நாளில் 100 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு

இந்தியாவில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துள்ளதாக NCRB அறிக்கையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக 2023-ல் ஒரு நாளில் 175 திடீர் மரணங்கள் ஏற்பட்டதாகவும், அதில் 100 உயிரிழப்புகள் மாரடைப்பால் நிகழ்ந்தவை என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 2023-ல் 35,637 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில், TN-ல் 1,711 பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர். எனவே இதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க..