News October 20, 2024
நவீன போருக்கு தயாராக இருக்கணும்: ராஜ்நாத்

நவீன கால போர்களுக்கு தயாராக இருக்க வேண்டுமென பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், பாரம்பரிய போர் முறைகளுக்குப் பதிலாக, சைபர், விண்வெளி, பொருளாதாரம் மற்றும் தகவல்கள் வாயிலாக தற்போது நடப்பதாகக் கூறினார். மேலும், புதிய களத்தில் நடக்கும் போர் பாரம்பரிய போர் முறைகளை விஞ்சிவிட்டது என்றார்.
Similar News
News July 5, 2025
டாப் 10 டெஸ்ட் ரன்கள் பட்டியலில் 2 இந்திய வீரர்கள்

25 ஆண்டுகளில் (2000 – தற்போதுவரை) டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த டாப் 10 வீரர்களில் இங்கிலாந்தின் ஜோ ரூட் – 13,109 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் ராகுல் டிராவிட் – 10,590 ரன்களுடன் 7-வது இடத்திலும் & 10,080 ரன்களுடன் சச்சின் 10-வது இடத்திலும் உள்ளனர். நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியிலும் ஜோ ரூட் இடம்பெற்றதால் முதலிடத்தில் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News July 5, 2025
APRO பணிகளில் திமுக ஐடி விங் ஊழியர்கள்? இபிஎஸ் தாக்கு

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (APRO) பணியிடங்களில் திமுக ஐடி விங் ஊழியர்களை நியமிப்பதாக தகவல் வெளியாவதாக குறிப்பிட்டுள்ள இபிஎஸ், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு இளங்கலை படிப்புடன், பத்திரிகை & மக்கள் தொடர்பு (அ) மீடியா சயின்ஸ் கட்டாயமாக்கப்பட்ட அரசாணையையும் திமுக அரசு திரும்பப் பெற முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலுக்காக இவர்களை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
News July 5, 2025
148 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்..

IND vs ENG மேட்சில், டெஸ்ட் கிரிக்கெட்டின் 148 ஆண்டுகால வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்ந்துள்ளது. ENG-ன் பிரைடன் கார்ஸின் சிராஜ் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறியது தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் 10,000-வது டக் அவுட்டாகும். 1877-ல் ENG-க்கு எதிராக ஆஸி.யின் நெட் கிரிகோரி தான் முதன்முதலில் டக் அவுட்டாகி இருந்தார். 148 வருடங்கள், 3 மாதங்கள் & 20 நாள்கள் கழித்து 10,000-வது டக் அவுட் நிகழ்ந்துள்ளது.