News May 16, 2024

அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்

image

மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிய அடுத்த 15 நாட்கள் INDIA கூட்டணியினர் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News November 25, 2025

காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த ஜாக்டோ ஜியோ

image

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை TN அரசு நிறைவேற்ற மறுப்பதாக ஜாக்டோ ஜியோ சாடியுள்ளது. இந்நிலையில் டிச.11, டிச.12-ல் மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு போராட்டமும், சென்னையில் டிச.27-ல் வேலைநிறுத்த மாநாடும் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 25, 2025

T20 WC: சேப்பாக்கத்தில் 7 போட்டிகள்

image

2026 டி20 உலகக் கோப்பை தொடரின், 7 போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. NZ Vs AFG, NZ Vs UAE, USA Vs NED, USA Vs NAM, NZ Vs CAN, AFG Vs CAN லீக் போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளன. ஒரு சூப்பர் சிக்ஸ் போட்டி பிப்.27-ம் தேதி நடைபெறுகிறது. இந்திய அணியின் ஒரு போட்டி கூட சேப்பாக்கத்தில் அறிவிக்கப்படாததால் Knowledgeable Chennai Crowd அதிர்ச்சி அடைந்துள்ளது.

News November 25, 2025

BREAKING: அரசியலில் இருந்து விலகினார்

image

தமிழருவி மணியன் தனது காமராஜர் மக்கள் கட்சியை கலைத்துவிட்டு அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டிச.20-ல் தனது கட்சியின் தொண்டர்களை ஜிகே வாசனின் தமாகாவில் இணைக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். 2009-ல் காந்திய மக்கள் இயக்கத்தை தொடங்கிய அவர், 2014-ம் ஆண்டு அதனை காந்திய மக்கள் கட்சியாக மாற்றினார். தொடர்ந்து, 2022-ல் தனது கட்சி பெயரை காமராஜர் மக்கள் கட்சி என மாற்றியிருந்தார்.

error: Content is protected !!