News May 16, 2024

அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்

image

மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிய அடுத்த 15 நாட்கள் INDIA கூட்டணியினர் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News December 5, 2025

விஜய் கட்சியில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

image

திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்துள்ளார். அண்மைக் காலமாக திமுக மீது அதிருப்தியில் இருந்த அவர், தற்போது விஜய் கட்சியில் இணைந்துள்ளார். செங்கோட்டையனைத் தொடர்ந்து நாஞ்சில் சம்பத்தும் தவெகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பலமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மதிமுக, திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளில் நாஞ்சில் சம்பத் பயணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News December 5, 2025

2026 தேர்தல்: நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

2026 சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்சியாக 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நாதக அறிவித்துள்ளது. கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவரான இடும்பாவனம் கார்த்திக், வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட உள்ளார். மேட்டூரில் வீரப்பனின் மகள் வித்யாராணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீமான் போட்டியிடும் தொகுதி குறித்த விவரம் வெளியாகவில்லை. பிப்ரவரியில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

News December 5, 2025

டியூட் பாடல்களுக்கு ₹50 லட்சம் பெற்ற இளையராஜா

image

‘டியூட்’ படத்தில் இடம்பெற்ற தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த தடை கோரி <<18463776>>இளையராஜா<<>> வழக்கு தொடர்ந்தார். இதில் இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து, இளையராஜாவுக்கு உரிய இழப்பீடும், படத்தில் கிரெடிட்டும் வழங்கப்படும் என இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், ₹50 லட்சத்தை இளையராஜா இழப்பீடாக பெற்றுள்ளார். இதனையடுத்து, அவர் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளார்.

error: Content is protected !!