News May 16, 2024
அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்

மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிய அடுத்த 15 நாட்கள் INDIA கூட்டணியினர் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 20, 2025
Cinema Roundup: ரஜினி படத்தில் இணைந்த அபேக்ஷா போர்வால்

*ஜித்து மாதவன் இயக்கும் ‘சூர்யா 47’ பட ஷூட்டிங் வரும் டிச., 8-ம் தேதி கேரளாவில் தொடங்குகிறது. *9 படங்களில் நடித்து கொண்டு பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. *‘வா வாத்தியார்’ பட ரிலீஸ் ஒருவாரம் (டிச.12) தள்ளிப்போவதாக தகவல். *‘அட்டகாசம்’ ரீ-ரிலீஸ் தாமதமான நிலையில், வரும் 28-ம் தேதி வெளியாவதாக அறிவிப்பு. *’ஜெயிலர் 2’ படத்தில் இந்தி நடிகை அபேக்ஷா போர்வால் நடிக்க உள்ளதாக தகவல்.
News November 20, 2025
ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசாக ₹5,000? புதிய தகவல்

பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுகளுக்கு தலா ₹5,000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பிஹார் தேர்தலில், மகளிருக்கு தலா ₹10,000 வழங்கிய அரசின் திட்டம் NDA கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. இதனால், 2026 பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு திமுக அரசும் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும், நிதி சூழலை அறிய அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அந்த நாளிதழ் கூறியுள்ளது.
News November 20, 2025
இந்தியா போரில் இறங்கலாம்: பாகிஸ்தான் அமைச்சர்

பாக்., மீது இந்தியா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என அந்நாட்டு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார். எல்லைகளில் ஊடுருவியோ (அ) ஆப்கனில் இருந்தோ தாக்கலாம், முழுமையான போரில் கூட ஈடுபடலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அதனால், தாங்கள் எப்போதும் அலர்ட்டாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். டெல்லி ம்ன்ம்ன்


