News July 21, 2024
₹8.5 கோடி வழங்கும் பிசிசிஐ

ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பாக பங்கேற்கும் வீரர்களுக்காக பிசிசிஐ ₹8.5 கோடி வழங்க முன் வந்துள்ளது. இதனை, செயலாளர் ஜெய் ஷா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாரீஸ் நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். அவர்களின் பயண செலவு, பயிற்சி செலவு ஆகியவற்றுக்காக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
நவம்பர் 28: வரலாற்றில் இன்று

*1890 – ஜோதிராவ் புலே நினைவுநாள்.
*1893 – நியூசிலாந்தில் முதல்முறையாக பெண்கள் வாக்களித்தனர்.
*1927 – மூத்த அரசியல்வாதி HV ஹண்டே பிறந்தநாள்.
*1964 – நாசா செவ்வாய் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
*1972 – பாரிஸ் நகரில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
News November 28, 2025
தவெகவில் செங்கோட்டையன்: ரஜினி ரியாக்ஷன்

தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது குறித்த கேள்விக்கு ‘நோ கமெண்ட்ஸ்’ என ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார். அதேநேரம், உதயநிதி ஸ்டாலினுக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துகளை கூறினார். ஏற்கெனவே, அரசியல் குறித்த கேள்விகளை கேட்க வேண்டாம் என்று ரஜினி கூறி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘ஜெயிலர் 2’ ஷூட்டிங் நன்றாக போய்க் கொண்டிருப்பதாகவும், ரசிகர்களின் ஆசியுடன் தான் சூப்பர் ஸ்டாராகவே உள்ளேன் என்றும் கூறினார்.
News November 28, 2025
அதிகளவில் சைக்கிள் பயன்படுத்தும் நாடுகள்

சில நாடுகளில், பைக்குகள், கார்களை விட அதிகளவில் சைக்கிள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நாடுகளில் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கின்றனர். குறிப்பாக, நெதர்லாந்து நாட்டில், மக்கள்தொகையை விட அதிக சைக்கிள்கள் உள்ளன. இதுபோன்று, எந்தெந்த நாடுகளில் சைக்கிள் பயன்படுத்தும் சதவீதம் அதிகமாக உள்ளது என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


