News September 25, 2025
ஜடேஜாவின் உழைப்பை அங்கீகரித்த BCCI

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர், 1 சதம் 5 அரைசதங்கள் உள்பட 516 ரன்கள் குவித்து மிடில் ஆர்டரில் இந்திய அணியின் தூணாக விளங்கினார். இந்நிலையில், காயம் காரணமாக ரிஷப் பந்த் ஓய்வில் உள்ளதால், அவருடைய துணை கேப்டன் பொறுப்பு ஜடேஜாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 25, 2025
5-வது நாளாக தொடர் சரிவு.. முதலீட்டாளர்கள் கலக்கம்

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5-வது நாளாக சரிவுடன் நிறைவடைந்துள்ளன. இன்று சென்செக்ஸ் 555 புள்ளிகள் சரிந்து 81,159 புள்ளிகளிலும், நிஃப்டி 166 புள்ளிகள் சரிந்து 24,890 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. ICICI, HDFC, Bajaj Finance நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை கண்டுள்ளன. அதேநேரம் Axis Bank, Bajaj Auto, Hero உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சற்று உயர்ந்துள்ளன.
News September 25, 2025
சிட்னி தண்டர் அணியுடன் அஸ்வின் ஒப்பந்தம்

பிக்பாஷ் தொடரில் சிட்னி தண்டர் அணியுடன் அஸ்வின் ஒப்பந்தம் செய்துள்ளார். ஐபிஎல்-ல் இருந்து ஓய்வை அறிவித்த அவர், டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என தெரிவித்திருந்தார். சிட்னி தண்டர் அணிக்காக அஸ்வின் 2 சீசனில் விளையாடுவார் என்றும் நடப்பு சீசனில் 4 போட்டிகளில் மட்டுமே ஆடுவார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சிட்னி தண்டர் அணிக்கு விளையாட ஆவலுடன் இருப்பதாக அஸ்வின் கூறியுள்ளார்.
News September 25, 2025
சென்னை வந்தடைந்தார் ரேவந்த் ரெட்டி

தமிழக அரசு சார்பில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி இன்னும் சற்று நேரத்தில் சென்னையில் துவங்குகிறது. இந்நிலையில், இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி சென்னை ஏர்போர்ட் வந்தடைந்தார். அப்போது அவரை அமைச்சர் TRB ராஜா வரவேற்றார். தொடர்ந்து, இருவரும் விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்கின்றனர்.