News April 16, 2025

IPL அணிகளுக்கு BCCI கொடுத்த அலெர்ட்

image

ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஐபிஎல் அணிகளின் ஓனர்கள், வீரர்களை மோசடி வலையில் வீழ்த்த முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விலை உயர்ந்த பரிசுகளை வழங்கி ஃபிக்ஸிங் உள்ளிட்ட மோசடி செயல்களை செய்யத் தூண்டுவதாகவும், இதனால் விழிப்புணர்வுடன் செயல்படவும் அணிகளுக்கு BCCI அறிவுறுத்தியுள்ளது. மேலும், சந்தேகத்திற்குரிய நபர்கள் யாராவது தொடர்பு கொண்டால் உடனே தெரிவிக்கவும் கூறியுள்ளது.

Similar News

News November 26, 2025

புஜாராவின் மைத்துனன் தற்கொலை

image

ராஜ்கோட்டில், கிரிக்கெட் வீரர் புஜாராவின் மைத்துனன் ஜீத் பபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் தான், Ex-Fiance கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்றிலிருந்து ஜீத் பபாரி மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில், மீள்வதற்கு வழிதெரியாமல் தான் இந்த விபரீத முடிவை எடுத்தாரா என போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

News November 26, 2025

பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி

image

அயோத்தி ராமர் கோயிலில் தர்மக்கொடி ஏற்றியதை, பாபர் மசூதி இடிப்பு மற்றும் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு என குறிப்பிட்டு பாக்., விமர்சித்து இருந்தது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, மதவெறி மற்றும் சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகளில் ஊறிப்போன பாக்., எங்களுக்கு உபதேசம் செய்ய தேவை இல்லை என தெரிவித்துள்ளது. மேலும், சொந்த நாட்டின் மனித உரிமை பிரச்னைகளில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

News November 26, 2025

கனவில் பாம்பு வருதா? இதுதான் அர்த்தம்

image

சிலருக்கு பாம்பு அடிக்கடி கனவில் வந்து கொண்டே இருக்கும். இதற்கு அர்த்தம் இருப்பதாக ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. ராகு தசை, கேது தசை நடக்கும்போது, அப்படி கனவு வருமாம். ஒற்றை நல்ல பாம்பை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்புகளை கண்டால் நன்மைகள் நடக்கும். பாம்பு கடித்துவிட்டதாக கனவு வந்தால் பணம் கொட்டுமாம். உங்க கனவுல பாம்பு வந்திருக்கா?

error: Content is protected !!