News April 21, 2025
பார்சிலோனா ஓபன்.. பட்டம் வென்றார் டென்மார்க் வீரர்!

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். ஃபைனலில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை அவர் எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற ஆட்டத்தில், 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று ஹோல்ஜர் ரூனே வாகை சூடினார். 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.
Similar News
News August 9, 2025
கம்பேக் கொடுக்க தயாராகும் கோலி

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பயிற்சியில் <<17340341>>கோலி <<>>ஈடுபட்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை கோச் நயீம் அமினுடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். வரும் அக்டோபர் 19 முதல் 25 வரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் கோலி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நரைத்த மீசை, தாடியுடன் கோலி இருந்த புகைப்படம் வைரலானது.
News August 9, 2025
ராகுலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பியூஷ் கோயல்

எப்போதும் எதிர்க்கட்சியாக இருக்க ராகுல் காந்தி ஆசைப்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். வெளிநாட்டினரின் பேச்சை கேட்டு இந்திய பொருளாதாரம் குறித்து எதிர்மறையாக ராகுல் விமர்சனம் செய்வதாகவும், இதற்காக நாட்டு மக்கள் என்றும் அவரை மன்னிக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியாவை உலகநாடுகள் அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
மீண்டும் அமெரிக்கா செல்லும் பாக்., தளபதி

பாகிஸ்தான் தளபதி அசிம் முனீர் மீண்டும் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அமெரிக்க தளபதி மைக்கேல் இ குரில்லாவின் பிரியாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறார். பஹல்காம் தாக்குதலை அடுத்து அசிம் முனீர் டிரம்ப்புடன் விருந்தில் பங்கேற்ற நிலையில், 2 மாதங்களில் 2-வது முறையாக பயணம் செய்கிறார். இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் விழுந்த நிலையில், இப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.