News March 29, 2024
வங்கிகள் இன்று செயல்படாது

கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி விழாவையொட்டி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வங்கிகளும் இன்று மூடப்பட்டிருக்கும். அதேநேரத்தில் இணையதள வங்கி சேவைகள் செயல்படும். ஏடிஎம் மைய சேவைகளும் எந்தத் தடையும் இன்றி செயல்படும். நிதியாண்டு 31ஆம் தேதி முடிவதால், நாளை (சனி), நாளை மறுநாள் (ஞாயிறு) வங்கிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
சிவகங்கை: வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து!

இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராமத்தில் களையெடுக்கும் பணி முடித்துவிட்டு, ஒரு மினி வேனில் 20க்கும் மேற்பட்டோர் வந்தனர். பெருமானேந்தல் அருகே மினிவேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்ததில், குயவர்பாளையத்தை சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 9, 2025
நாதகவில் இருந்து விலகல்.. புதிய கட்சி உதயம்

நாதக ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியுள்ளனர். மாவட்டச் செயலாளராக இருந்த கண்.இளங்கோ தலைமையில் ‘மேதகு நாம் தமிழர் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. திராவிட கட்சிகளுக்கு எதிராக நாதக செயல்படவில்லை என குற்றஞ்சாட்டிய கண்.இளங்கோ, வெறுமனே பேசினால் மட்டுமே ஆட்சியை பிடித்துவிடலாம் என நாதக தலைமை நம்புகிறது என சாடியுள்ளார்.
News December 9, 2025
நார்த்தங்காயின் நன்மைகள்

நார்த்தங்காயில் இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் சி & பி அதிகம் நிறைந்துள்ளது. நார்த்தங்காய் ஊறுகாய் போட மட்டுமல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நன்மைகளை தருகின்றன. அவை என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.


