News March 27, 2024
ஞாயிறு அன்று வங்கிகளுக்கு விடுமுறை இல்லை

ஞாயிற்றுக் கிழமை (மார்ச் 31) அன்று வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படவுள்ளது. ஆனால், அன்றைய தினம் அரசு தொடர்பான சேவைகள் மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும் வழக்கமான பரிவர்த்தனைகள் செய்யப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, மார்ச் 29, மார்ச் 31 & ஏப்ரல் 1 வழக்கமான வங்கி சேவைகள் கிடையாது
Similar News
News November 6, 2025
கோவை பாலியல் கொடூரம்.. மதுவிலக்கு கோரும் திருமா

பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த மதுவிலக்கை TN அரசு அமல்படுத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கோவை மாணவி கூட்டு பாலியல் கொடூரமானது, பெண்கள் பாதுகாப்பில் அரசு கூடுதல் அக்கறை எடுப்பது அவசியம் என்பதை உணர்த்துவதாக X-ல் அவர் தெரிவித்துள்ளார். அதிக மது அருந்துவதில் இந்தியாவிலேயே TN 2-வது மாநிலமாக இருப்பதாகவும், 12% குடிநோயாளிகளாக உள்ளது கவலையை தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 6, 2025
விஜய்க்கு குற்ற உணர்ச்சியே இல்லை: வைகோ

கரூர் துயரில் குற்ற உணர்ச்சியே இல்லாமல் விஜய் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது தவறான போக்கு என வைகோ விமர்சித்துள்ளார். 41 பேர் உயிரிழப்பில் முழு பொறுப்பேற்க வேண்டிய விஜய் கண்ணியமற்ற வகையில் CM மீது வெறுப்பை கொட்டித் தீர்த்திருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், பொதுவாழ்வில் ஆத்தி சூடியைக்கூட அறியாத விஜய், ஆட்சிக்கு வந்தது போல் கற்பனை வாழ்வில் திளைக்கிறார் என்றும் வைகோ கூறியுள்ளார்.
News November 6, 2025
Cinema Roundup: ‘D54’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ கசிந்தது

*‘பராசக்தி’ முதல் சிங்கிள் ‘அடி அலையே’ நாளை மாலை 5:30-க்கு வெளியாகும். *அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘தீயவர் குலை நடுங்க’ வரும் 21-ம் தேதி வெளியாகும். *ஸ்ரீகாந்த், ஷாம் நடிக்கும் ‘தி ட்ரெய்னர்’ படம் வெளியீட்டுக்கு தயாரானது. *‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் கசிந்தது. *‘கைதி’ மலேசிய ரீமேக் நாளை வெளியாக உள்ளது.


