News March 17, 2025
வங்கி சேவைகள் 4 நாள்கள் முடங்கும் அபாயம்!

வாரத்தில் 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்கு முந்தைய 2 நாள்கள் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமையாக உள்ளன. இதனால், 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்க வாய்ப்புள்ளது. அதனால், பொதுமக்கள் தங்களது வங்கி பணியை வரும் 22ம் தேதியே முடித்துக் கொள்வது நல்லது.
Similar News
News July 7, 2025
பிரசவ வலி.. இக்கட்டான சூழல்! சாதுரியமாக செயல்பட்ட பெண்!

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு சாதுரியமாக ரயில் நிலையத்தில் பிரசவம் பார்த்த ராணுவ டாக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சிகிச்சைக்கு கருவிகள் இல்லாத போதிலும், தொப்புள் கொடியை இறுக்க ஹேர் கிளிப்பையும், வெட்டுவதற்கு கத்தியையும் பயன்படுத்தி பிளாட்பாரத்திலேயே பார்த்துள்ளார் ராணுவ டாக்டர். அவரின் சாதுரியத்தை பலரும் பாராட்டுகின்றனர்.
News July 7, 2025
செல்போன் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு?

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டே கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க முடிவெடுகப்பட்டுள்ளதாம். 5G விரிவாக்கம், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இப்போது இதனை அமல்படுத்த தயாராகி வருகின்றன. பேசிக் பிளான்களை தவிர மற்றவைகளை உயர்த்தவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
News July 7, 2025
50 ஆபாச வீடியோக்கள்… சிக்கிய இந்து அமைப்பு நிர்வாகி

கர்நாடகாவில் இந்து அமைப்பு நிர்வாகியின் செல்போனில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஸ் மீது கல் வீசியதாக சமித் ராஜூ கைதாகி ஜாமினில் வெளியே வந்தார். கைதானபோது அவரது செல்போனை கைப்பற்றி போலீஸ் விசாரித்ததில் இந்த பகீர் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை விசாரிக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்கலாம் எனக் கூறப்படுகிறது.