News February 17, 2025

பேங்க் வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

பேங்க் ஆப் மகாராஷ்ட்ரா வங்கியின் கிளைகளில் 172 மேனேஜர்கள் பதவிகள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பப்பதிவு <> bankofmaharashtra.in<<>> இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விண்ணப்பப்பதிவு இன்றுடன் முடிவடையவுள்ளது. ஆதலால் வேலையில் சேர விரும்புவோர் உடனே விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை வேலைதேடும் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி உதவுங்கள்.

Similar News

News October 15, 2025

செருப்பு மட்டுமல்ல, பாட்டிலும் வீசப்பட்டது: அமைச்சர்

image

கரூர் தவெக கூட்டத்தில் ரவுடிகள் புகுந்ததாக கூறப்படுவது குறித்து நயினார் நாகேந்திரன் பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், செருப்பு வீச்சை யாரும் திட்டமிட்டு செய்யவில்லை என்றார். இதனையடுத்து பேசிய அமைச்சர் சிவசங்கர், கீழே விழுந்த ஒருவருக்கு உதவுவதற்காகவே செருப்பு வீசப்பட்டதாக கூறினார். அத்துடன் பாட்டில், தேங்காயும் வீசப்பட்டதாகவும் தெரிவித்தார்.

News October 15, 2025

சற்றுமுன்: இபிஎஸ் அணியில் இணைந்த செங்கோட்டையன்

image

ஒருங்கிணைப்பு விவகாரத்தில், EPS மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் மீண்டும் அவரது அணியில் இணைந்துள்ளார். பேரவையில், EPS-ன் உத்தரவின்பேரில், கரூர் துயரத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ADMK MLA-க்கள் கருப்பு பட்டையுடன் வந்திருந்தனர். Ex அமைச்சர் செங்கோட்டையனும் கையில் கருப்பு பட்டையுடன்(OPS அணியவில்லை) வந்திருந்தார். அத்துடன், அவர் Ex அமைச்சர்கள் சிலரிடம் மரியாதை நிமித்தமாக பேசியுள்ளார்.

News October 15, 2025

SC-ன் கருத்து வேதனைக்குரியது: ஸ்டாலின்

image

கரூர் வழக்கில் CBI விசாரிக்கவுள்ளதை கண்காணிக்கும் குழுவில் தமிழக IPS அதிகாரிகள் இடம்பெறக் கூடாது என SC உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த கருத்து தமிழக மக்களுக்கே வேதனைக்குரிய ஒன்றாக உள்ளதாக CM ஸ்டாலின் கூறினார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய அவர், இதுகுறித்து உரிய சட்ட ஆலோசனை பெற்று நிச்சயமாக SC-ஐ அணுகுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!