News March 20, 2024
மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் விடுமுறை ரத்து

மார்ச் 31ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசுத் துறைகளின் கணக்குகளை பராமரிக்க வரும் 31ஆம் தேதி வங்கிகளின் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டுக்கான அரசின் நிதி விவரங்களை முடிப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News December 7, 2025
BREAKING: செங்கோட்டையன் அறிவித்தார்.. விஜய் புதிய முடிவு

ஈரோட்டில் வரும் 16-ம் தேதி விஜய்யின் கூட்டத்திற்கு மாற்று ஏற்பாடாக விஜயமங்கலம் டோல்கேட் அருகே 16 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். <<18493694>>முன்னதாக பவளத்தாம்பாளையத்தில்<<>> அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த இடத்திற்கு அனுமதி கேட்டு மற்றொரு கடிதம் வழங்க உள்ளதாகவும் கூறினார். மேலும், விஜய்யின் வருகையால் ஈரோட்டில் மாபெரும் மாற்றம் நிகழும் என்றும் சூளுரைத்தார்.
News December 7, 2025
துப்பாக்கிச்சூடு: குழந்தைகள் உள்பட 11 பேர் பலி

தெ.ஆப்பிரிக்காவின் நிர்வாக தலைநகரான பிரிட்டோரியா அருகே உள்ள சால்ஸ்வில்லே நகரில், மதுபான விடுதியில் நுழைந்த கும்பல் ஒன்று சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், 3 வயது, 12 வயது என 3 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வரும் போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
News December 7, 2025
நடிகை சோனாரிகாவிற்கு குழந்தை பிறந்தது ❤️❤️❤️

கெளதம் கார்த்திக்கின் ‘இந்திரஜித்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனாரிகா படோரியா. இவருக்கு, தொழிலதிபர் விகாஸ் பரஷார் உடன் 2024-ல் திருமணம் முடிந்தது. இந்நிலையில், இத்தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மழலை வாசமிக்க பிஞ்சு கால் விரல்களை பிடித்தவாறு சோனாரிகா வெளியிட்ட போட்டோவுக்கு லைக்குகள் குவிகின்றன. மேலும், திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.


