News March 19, 2025

ஏப்.1 முதல் UPI கணக்குகள் முடக்கம்!

image

ஏப்ரல் 1 முதல் சில அதிரடி நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ளவுள்ளன. அந்த வகையில், GPAY, PHONEPE, PAYTM போன்ற UPI ஆப்களுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்கள் நீண்டகாலமாக செயல்படாமல் இருந்தால், அந்த UPI கணக்குகள் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, UPI உடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News July 7, 2025

தர்மபுரியில் போக்குவரத்து மாற்றம்

image

ஓசூரில் கடந்த 21ஆம் தேதி பாலம் விரிசல் ஏற்பட்டதால் பெங்களூரு, மைசூர் செல்லும் வாகனங்களை தர்மபுரிக்கு மாற்றம் செய்து பிரித்து விடும் பணி தொடங்கியுள்ளது. இதன்படி தர்மபுரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி வழியாக (என்எச்-44) செல்லும் கார்கள் மற்றும் சரக்கு வாகனங்களை, தர்மபுரி-ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் நல்லூருக்கு அமைக்கப்பட்டு வரும் புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக பிரித்து அனுப்பப்படுகிறது.

News July 7, 2025

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விஜய்..!

image

விஜய் செயற்குழு கூட்டத்தை நடத்திய பிறகு ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற விமர்சனத்தை தகர்த்துள்ளார்.இது ஒருபுறமிருக்க கட்சியில் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த நிர்வாகிகள் நியமனத்தை தீவிரப்படுத்தியுள்ளார் விஜய். தவெகவுக்கு தற்போது 120 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில், மாநகரம், நகரம், ஒன்றிய அளவிலான நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும் விரைவில் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் உள்ளன.

News July 7, 2025

வீட்டில் வேல் வைத்து வழிபடலாமா?

image

‘வேலுண்டு வினையில்லை’ என்பதிலேயே இதற்கான விடை தெரிந்துவிடும். திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் திருநீறு பூசப்பட்டு, அதற்கு மேல் செம்பு வர்ணத்தில் ஒரு வேலும் வைக்கப்பட்டது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இப்படிப்பட்ட முருகனின் ஆயுதமான வேலினை வீட்டில் வைத்து வழிபட்டால் கர்ம வினைகள் அகற்றப்படும். வேலுக்கே உரிய மூலமந்திரத்தை நா மணக்க மணக்க கூற வாழ்வை செழிப்புறச் செய்வான் வேலாயுத நாயகன்.

error: Content is protected !!