News April 16, 2025
மே.வங்க கலவரத்தில் வங்கதேச குற்றவாளிகள்

வக்ஃப் சட்டத்தை எதிர்த்து மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டத்தில் வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மமதா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு ஊடுருவல்காரர்களை தடுக்க தவறியதாகவும் குற்றம்சாட்டியுள்ளன. மாநிலத்தில் நடந்த கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், மத்திய பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டன.
Similar News
News January 20, 2026
தமிழக அரசு மீது கவர்னர் சரமாரி குற்றச்சாட்டு

<<18904041>>சட்டப்பேரவையில் இருந்து கவர்னர் ரவி<<>> வெளியேறியது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. *உரையில் பெண்களின் பாதுகாப்பு *போதைப்பொருள் பழக்கத்தால் 2,000 பேர் தற்கொலை *பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரிப்பு *அறங்காவலர் குழுக்கள் இன்றி கோயில்களை மாநில அரசு நிர்வகிப்பது உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகள் தமிழக அரசின் உரையில் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
News January 20, 2026
தவெகவில் இருந்து செங்கோட்டையன் விலகலா?

தேர்தலுக்கு முன்பே கட்சி மாற <<18903913>>KAS<<>> திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இது உண்மைக்கு மாறான செய்தி என செங்கோட்டையன் தனது X பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தனக்கு சோதனை ஏற்பட்ட போது, தனது கரம் பிடித்து அரசியலில் ஒரு வரலாறு படைக்கின்ற அளவிற்கு இன்று தன்னை விஜய் உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2026-ல் விஜய்யை CM ஆக்குவதற்கு ஒற்றுமையுடன் உழைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
News January 20, 2026
சென்சார் போர்டை சாடிய ‘ஜன நாயகன்’ பட தயாரிப்பாளர்

‘ஜன நாயகன்’ படம் தொடர்பான வழக்கின் விசாரணை ஐகோர்ட்டில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை சென்சார் போர்டு டிச.19-ல் பார்த்த நிலையில் மறு தணிக்கை என ஜன.5-ம் தேதிதான் தெரிவிக்கப்பட்டதாக ஜன நாயகன் படக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது. சென்சார் போர்டிடம் வெளிப்படைதன்மை இல்லை எனவும் சாடியுள்ளது. படத்திற்கு எதிரான புகார் குறித்த தகவலை சென்சார் போர்டு கொடுக்கவில்லை எனவும் வாதிடப்பட்டுள்ளது.


